தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பு - ASSOCIATION OF SOUTHEAST ASIAN NATION


ஆசியான் 

நாடுகளின் கூட்டமைப்பு


தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பு - ASSOCIATION OF SOUTHEAST ASIAN NATION

ஆசியான் அமைப்பானது தாய்லாந்தில் பாங்கொங் நகரில் 1967 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, போன்ற பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வலய சமாதானம் நிலைப்பாடு என்பவற்றைப் பேணுவது, இதன் பிரதான நோக்கத்துடன் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கி அவதானம் செலுத்தப்பட்டது. இது தென்கீழ் ஆசிய நாடுகளுக்கிடையே கூட்டுணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

ஆரம்பத்தில் இவ் அமைப்பில் சம்பந்தப்பட்ட 5 நாடுகளும் நட்பு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. எல்லா நாடுகளினதும் சுதந்திரம், இறைமை ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல், பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, சமாதானமான முறையிலே பிணக்குகளை தீர்த்து வைத்தல், இந்த நாடுகளுக்கிடையே பயனள்ள ஒத்துழைப்பை உண்டாக்குதல் ஆகியன அதில் இடம்பெற்றிருந்தன.

இதனைவிட நட்புப் பிரகடனம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. சமூக, பொருளாதார, கலாசார உறவுகள் சம்பந்தமாகக் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள், ஆலோசனை வழங்கல். வலயத்தில் சமாதானத்தைப் பேணுதல், அரசியல் சுதந்திரத்தினையும் உறுதிப்பாட்டினையும் பாதுகாத்தல், வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், இயற்கை அழிவுகளின் போது ஒருவருக்கொருவர் உதவியளித்தல், பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஒத்துழைத்தல் ஆகியன இடம்பெற்றிருந்தன.

ஆசியான் அமைப்பினூடாக அபிவிருத்தி அடைந்த நாடுகளினூடாக இவ்வமைப்பு நாடுகள் பல உதவிகளை பெற்றுக் கொண்டன. இவ்வுதவிகள் சர்வதேச ரீதியில் சமூகநல்லுறவை பேணுவதற்கு உதவுகின்றன.

உதாரணம் - இப்பிராந்திய நாடுகளுக்கான கடல்தொழில் மேம்பாட்டிற்கும் அறுபடைப் பாதுகாப்பிற்கும் கடனாக உதவி வழங்கியது.

ஆசியான் அமைப்பின் நோக்கம்

வலயத்தில் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்தல்.

பரஸ்பரம் புரிந்துணர்வுடனான பங்கேற்புடன் கூடிய ஆய்வுத்துறையை விருத்தி செய்தல்.

அங்கத்துவ நாடுகளுக்கிடையே வியாபார நடவடிக்கையை விருத்தி செய்தல், சர்வதேச வர்த்தக நடவடிக்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் படி நீதி, சமாதானம் என்பவற்றை நிலைநாட்டுவதனூடானக வலயத்தில் சமாதானம் அதன் உறுதித்தன்மையை முன்னெடுத்துச் செல்லல்.

2008 ஆம் ஆண்டு ஆசியான் சமூகத்தை 3 பகுதிகளின் கீழ் பெயரிட்டு செயற்படுவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

ஆசியான பாதுகாப்பு சமூகம்

ஆசியான் பொருளாதார சமூகம்

ஆசியான் சமூக கலாசார சமூகம்

இந்த அடிப்படைப் பிரிவுகள் மூன்றின் கீழ் ஆசியான் அமைப்பிற்குள்ளான நாடுகளின் ஒத்துழைப்புடன் சவால்களை வெற்றிக் கொள்தல்.

தற்போது ஆசியான் அமைப்பானது புதிய மனித உரிமை அமைப்பை அமைத்துள்ளது. இவ் அமைப்பு பற்றி ஆசியான் தலைவர் "இந்த அமைப்பு ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களது உரிமையைப் பெருக்கவும் ஆசியானின் சமூக வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்தவும் உறுப்பு நாடுகளை கடப்பாடு கொள்ளச் செய்யும்" எனக் கூறியுள்ளார். இவ்வாறாக ஆசியான் அமைப்பு சமூகநல்லுறவுச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

நன்றி

Post a Comment

0 Comments