ஆகஸ்ட் மாதத்தில் உள்ள சிறப்பு தினங்கள் - SPECIAL DAYS IN AUGUST


ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 

சிறப்பு தினங்கள் 


ஆகஸ்ட் மாதத்தில் உள்ள சிறப்பு தினங்கள் - SPECIAL DAYS IN AUGUST

ஆகஸ்டு - 1

சர்வதேச தாய்ப்பால் தினம்

தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆகஸ்டு முதல் வெள்ளி

சர்வதேச பீர் தினம்

சர்வதேச பீர் தினம் 2007ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ், கலிபோர்னியாவில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது உலகின் 50 நாடுகளில் 207 நகரங்களில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. பீர் நண்பர்களை ஒன்று சேர்க்கிறது. அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடுவதன்மூலம் பீர் பாதைகளின் கீழ் உலகம் ஐக்கியம் ஆகிறது என இத்தினத்தைக் கொண்டாடுபவர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்டு முதல் ஞாயிறு

உலக நண்பர்கள் தினம்

அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. பிறகு மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு - 6

ஹிரோசிமா தினம்

இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின்மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆகஸ்டு - 8

உலக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினம்

முதலாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வீரர் வால்டர் இயோ என்பவருக்கு முதல் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இவருக்கு 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 அன்று சர் ஹெரால்டு கில்லீஸ் (Harold Gillies) என்கிற மருத்துவர் முகச் சிகிச்சை செய்தார். இதுவே உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி ஆகும். அதனால் ஹெரால்டு கில்லீஸ் என்பவரை பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்கின்றனர்.

உலக பூனை தினம்

பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.

ஆகஸ்டு - 9

நாகசாகி தினம்

அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 அன்று பேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்

ஐ.நா. பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்டு 9 ஐ உலக பூர்வ குடிமக்கள் தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு - 12

சர்வதேச இளைஞர் தினம்

இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, அவர்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற பார்வை 1995ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் கவனத்திற்கு வந்தது. ஆகஸ்டு 12 ஐ சர்வதேச இளைஞர் தினமாக 1998ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இளைஞர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனை களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

ஆகஸ்டு - 13

சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்

உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையோர்களாக இருக்கின்றனர். இடது கைப்பழக்கம் என்பது இயற்கையிலே ஒருவரின் மூளை வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. இவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்களுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் இத்தினம் 1992ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு - 19

உலக மனித நேய தினம்

போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19 அன்று கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது. துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பணிபுரிவோர் மற்றும் இப்பணியில் ஈடுபடும்போது காயம் அடைந்தோர், உயிரிழந்தோர்களை நினைவுகூரும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக புகைப்பட தினம்

லூயிசு டாகுவேரே என்பவர் 1839ஆம் ஆண்டு டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதனை பிரான்ஸ் அரசு ஆகஸ்டு 19ஆம் தேதி ப்ரீடுதி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படத்தின் சிறப்பு, புகைப்படக் காரர்களின் திறமையை கொண்டாடும் வகையில் இத்தினம் அமைகிறது.

ஆகஸ்டு - 23

சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791 ஆகஸ்டு 22 நள்ளிரவுமுதல் 23 வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 அன்று நினைவு விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு - 29

சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்

அணு ஆயுதம் முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசப்பட்டது. அதன் பிறகு இதுவரை 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும், சுற்றுச்சூழலும், நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இன்றைக்குள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள்பற்றியும் அதன் பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக விளையாட்டு தினம்

உடல் வலிமையும், ஆற்றலும் மிக்கவர்களாக இளைஞர்கள் விளங்க வேண்டும் என்றால் உடற்பயிற்சியும், விளையாட்டும் அவசியம் தேவை. விட்டுக் கொடுக்கும் பண்பு, சகிப்புத்தன்மை, சிந்தனை தூண்டல் ஆகியவை விளையாட்டுக்கு உண்டு. ஆகவே குழந்தைகள், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு - 30

சர்வதேச காணாமற் போனோர் தினம்

உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரகசியக் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன போராடுகின்றன.

நன்றி

Post a Comment

0 Comments