யாழ்ப்பாண இராசதானி
யாழ்ப்பாண இராசதானி தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொள்வதற்கான மூலாதாரங்கள்:
யாழ்ப்பாண வைபவமாலை
செகராச சேகரமாலை
கைலாச மாலை
13ம் நூற்றாண்டின் அரைப்பாகத்தில் ஜாவா நாட்டுச் சந்திரபானு மன்னன் வடக்கே யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் சில வன்னிப் பிரதேசங்களிலும் தன் அதிகாரத்தைப் பரவச் செய்து ஆட்சி செய்ததாக மூலாதாரங்களிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அறிய முடிவதுடன்,
2ம் பராக்கிரமபாகு தம்பதெனியாவை ஆட்சி செய்த காலத்தில் பாண்டியரது பூரணமான உதவியுடன் சந்திரபானுவைத் தோற்கடித்ததோடு அதன் பின்னர் பாண்டியர் வடபகுதியில் தம் பிரதிநிதியாக சந்திரபானுவின் மகன் ஒருவனையும் நியமித்தனர்.
பாண்டியரது ஆட்சி பலவீனமுற்ற நிலையில் 1310 - 1311 வரையான காலப்பகுதியில் ஆரியச்சக்கரவர்த்திகள் வடபகுதியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண வைபவ மாலை கூறும் ஆரியச்சக்கரவர்த்திகளாக,
விஜய கூழங்கை
குலசேகர
விக்கிரம சிங்கன்
வரோதயன்
மார்த்தாண்டன்
குணபூசனன்
வரோதயன்
ஜயவீரன்
கனகசூரியன்
பரராஜசேகரன்
சங்கிலியன்
போன்றவர்களை குறிப்பிடலாம்.
இவர்கள் பாண்டிய பேரரசின் தென் பகுதியொன்றான வெச்சருக்கை நாடு எனும் பிரதேச ஆட்சியாளர்களது குடும்பத்துடன் தொடர்புடையவர்களாவர் எனக் கருதப்படுகிறது.
இப்பரம்பரைக்குரிய 12 ஆட்சியாளர்கள் பற்றிய தகவல்கள கிடைக்கப்பட்டுள்ளன. அவ்வனைவரதும் பெயர்களின் பின்னால் சிங்கை ஆரியன் எனும் பெயர் காணப்படுவது சிறப்புக்குரிய விடயமாகும்.
1344 ல் இலங்கை வந்த இப்னு பதுாதா ஆரியச்சக்கரவர்த்தியை இலங்கையின் சுல்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
3 ம் விக்கிரமபாகு காலத்தில் கம்பளை இராசதானியைத் தாக்கிய இவர்கள் அங்கு சில பகுதிகளில் வரி அறவிட்டதாகவும் கூறப்படுகிறது .
கோட்டை இராசதானி மன்னனான 6 ம் பராக்கிரமபாகு சப்புமல் குமாரனை அனுப்பி ஆரியச்சக்கரவர்த்தியை தோற்கடித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நாட்டை ஒருமுகப்படுத்தினான்.
அதன் பின்னர் போர்த்துக்கேயரால் 1619 ல் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதோடு இவ் இராசதானி வீழ்ச்சி அடைந்தது.
யாழ்ப்பாண மன்னர்கள்
கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி 1210 - 1246
குலசேகர சிங்கையாரியன் 1246 - 1256
குலோத்துங்க சிங்கையாரியன் 1256 - 1279
விக்கிரம சிங்கையாரியன் 1279 - 1302
வரோதய சிங்கையாரியன் 1302 - 1325
மார்த்தாண்ட சிங்கையாரியன் 1325 -1348
குணபூஷண சிங்கையாரியன் 1348 -1371
வீரோதய சிங்கையாரியன் 1371 - 1394
சயவீர சிங்கையாரியன் 1394 -1417
குணவீர சிங்கையாரியன் 1417 - 1440
கனகசூரிய சிங்கையாரியன் 1440 -1450
செண்பகப்பெருமாள் 1450 -1467
கனகசூரிய சிங்கையாரியன் (2ம் தடவை) 1467 -1478
பரராச சேகரன் சிங்கையாரியன் 1478–1519
சங்கிலியன் 1519 - 1560
புவிராஜ பண்டாரம் 1561 -1565
காசி நயினார் 1565 - 1570
பெரிய பிள்ளை 1570 - 1572
புவிராஜ பண்டாரம் 1572 -1591
எதிர்மன்னசிங்கம் 1591 -1615
அரசகேசரி 1615 - 1617
சங்கிலி குமாரன் 1617 - 1620
0 Comments