அகில உலக செஞ்சிலுவைச் சங்கம் - INTERNATIONAL COMMITTEE RED CROSS (ICRC)

 

அகில உலக

 செஞ்சிலுவைச் சங்கம்


அகில உலக செஞ்சிலுவைச் சங்கம் - INTERNATIONAL COMMITTEE RED CROSS (ICRC)

ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு இவ் இயக்கத்தில் நாடு, இனம், மதம், வகுப்பு, அரசியல் கருத்து என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் மனித உயிர்களையும் உடல் நலத்தையும் பாதுகாத்தல், மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்தல், மனிதர்களின் துன்பங்களை தடுத்தலும் அவற்றை நீக்குதலையும் கொள்கையாகக் கொண்டுள்ளது இவ் அமைப்பு.

இவ் அமைப்பானது 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் Henry Dunant என்பவரால் உருவாக்கப்பட்டது.

இவர் 1859 Jun - வட இத்தாலியில் சோல்பரி எனும் இடத்தில் ஒஸ்ரியா சல்பீரியா ஆகிய நாடுகளுக்குள் இடம்பெற்ற சண்டையில் 40,000 பேருக்கு மேல் இறந்ததுடன், போர் வீரர்கள் பலர் துன்புறுத்தப்பட்டனர். இதன் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் 4பேர் இணைந்து இவ் அமைப்பு உருவாக்கினார்கள்.

1964 இல் ஜெனிவா சம்மேளத்துடன் இது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ICRC யின் பணிகள்

யுத்தங்களுக்கும் வரையறைகள் உண்டு. இதற்காகவே யுத்தம் புரிபவர்கள் மனித நேயக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

போர் வீரர்களுக்கான விதிகள் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள போர் வீரராக இருங்கள்.

எதிரிப் போராளிகளுடன் மட்டும் சண்டையிடுங்கள்.

உங்கள் நோக்கத்துக்கு அவசியமில்லாத எதையும் அழிக்காதீர்கள்.

போரிலிருந்து விலகியிருப்பவர்களுடன் சண்டையிட வேண்டாம்.

காயமடைந்தவர் அல்லது சுகவீனமுற்றவர் யாராக இருந்தாலும் தூக்கிச் சென்று பராமரியுங்கள்.

உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குடி மக்களையும் எதிரிகளையும் கன்னியமாக நடத்துங்கள்.

யுத்தக் கைதிகள், மனிதாபிமானமாக நடாத்தப்பட வேண்டும். எவரையும் பணயம் வைக்காதீர்.

செஞ்சிலுவைச் சின்னம் அல்லது வேறு பாதுகாப்புச் சின்னங்களை தாங்கியுள்ள ஆட்களுக்கும் பொருட்களுக்கும் மதிப்பளியுங்கள்.

மற்றவர்களின் சொத்துக்கு மதிப்பளியுங்கள்.

இந்த விதிகள் மீறப்படுவதைத் தடுங்கள்.

ICRC யின் பங்காக இயக்கத்தின் சட்டங்களுக்கு அமைய ஆயுத மோதல்களில் மதிப்பளிக்க வேண்டிய சர்வதேச மனிதநேயச் சட்டங்களை விளக்கவும் அதன் அறிவை பிரசித்தப்படுத்தலின் மூலம் சட்ட அபிவிருத்தியை விரிவாக்கவும் அதனை உத்தரவாதப்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றது.

ICRC மனிதநேயச் சட்டங்களின் ஊக்குவிப்பாளராக அதற்கு தேவையான சகல சட்ட விரிவுரைகளையும் அனுபவ ரீதியான திறமைகளையும் நாடுகளுக்கு வழங்குகிறது.

ஆயுத மோதல்களுக்கு எதிராக பல சட்டங்களுக்கும் ஒத்தாசை வழங்கியுள்ளது.

1995 - குருடாக்கும் லேசர் ஆயுதங்களின் பாவிப்பை தடுக்கும் அடிப்படைச் சட்டம்.

1997 - மிதிவெடிகளின் பாவிப்புக்கு எதிரான ஒப்பந்தம்.

1998 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டக்கோவை.

ICRC நாடுகளுக்கிடையில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை செயற்படுத்துவதில் தேவையான அறிவுரைகளை வழங்குகின்றது.

மனிதநேயச் சட்டங்களை பிரசித்தப்படுத்துவதில் ICRC யின் செயற்பாடு 3 வகைப்பட்டது.

நாட்டிற்கு அதன் பொறுப்பை நினைவூட்டுதல் மூலமாகவும் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வுச்சியை ஊக்குவிப்பதிலும்,

நாட்டிற்கு சட்டரீதியான நியமங்களை எவ்வாறு சீரான நடத்தைக்குரிய சட்டங்களாக மாற்றுவது என்பதில் அறிவுரை வழங்குவதிலும் கற்பிக்கும் உதவிகளை உருவாக்குதல்.

சட்டத்தை வளர்க்கவும் நாடுகளுக்கேற்ப போதனைகளை உள்ளடக்கவும்,

நாடுகள் மனிதாபிமான பிரச்சினைகளையும் சட்டங்களையும் உணரச் செய்வதற்காக ICRC மனிதாபிமான அரசியல் தந்திரத்தை உபயோகிக்கின்றது.

கவலை தரும் விவகாரங்களை சமூகத்தோடு பகிர்ந்து கொள்கின்றது. ஐ.நா.சபை உட்பட சர்வதேச மன்றங்களில் தட்டிக்கழிக்க முடியாத மனிதாபிமானத் தேவைகள், கோட்பாடுகள் பறறிய அறிவை உயர்த்துவதற்கும் அது பாடுபடுகின்றது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் பற்றிய அறிவையும் அதன் நடைமுறையையும் மேம்படுத்துகின்றது. தேசிய சட்டங்களுடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தன்மைகளும் கலந்திட உந்துதலளிக்கின்றது.

உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கும் நோக்குடையது.

யுத்தத்தினால் ஏற்படும் துன்பகரமான விளைவுகளை தடுப்பதும் குறைப்பதுவுமே ICRC யின் முக்கிய குறிக்கோளாகும்.

ஆயுத மோதல்கள் இடம்பெறும் காலத்தில் திடீரெனக் காணாமல் போகும் ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்தல், ICRC ஆற்றும் மனிதநேயப் பணிகளுள் முக்கியமான ஒன்றாகும். குடும்பங்களுக்கும் யுத்தத்தில ஈடுபடும் தரப்பினருக்கும் அது நடுநிலை மத்தியஸ்தராகச் செயல்படுகின்றது.

அடிப்படை மனிதாபிமான கோட்பாடுகள் பற்றியும் யுத்த நடவடிக்கைகளில் அனுசரிக்கப்பட வேண்டிய விதிகள் பற்றியும் முக்கியமாகப் போதிக்கின்றது.

தரையில் காயமடையும் சுகவீனமடையும் படைவீரர்களை பாதுகாக்கின்றது.

கடலில் காயமடையும் சுகவீனமடையும் அல்லது கப்பல் மூழ்கியதால் தத்தளிக்கும் படைவீரர்களைப் பாதுகாக்கின்றது.

யுத்த கைதிகளைப் பாதுகாக்கின்றது.

பொதுமக்களைப் பாதுகாக்கின்றது.

சர்வதேச மோதல்களில் பாதிக்கப்படுவோருக்கு மேலதிகப் பாதுகாப்பு 

போன்ற நடவடிக்கைகளை ICRC மேற்கொள்கின்றது.

நன்றி

Post a Comment

0 Comments