தமிழ் இலக்கணம் - இயல்பு வழக்குச் சொல் - TAMIL GRAMMAR - NORMAL CASE

 

இயல்பு வழக்குச் சொல்


தமிழ் இலக்கணம் - இயல்பு வழக்குச் சொல் - TAMIL GRAMMAR - NORMAL CASE

எப்பொருளுக்கு எச்சொல் அமைந்ததோ ,  அப்பொருளை அச்சொல்லால் கூறுதல் இயல்பு வழக்கு எனப்படும்.

இது மூன்று வகைப்படும்.
இலக்கணமுடையது 
இலக்கணப்போலி 
மரூஉ

இலக்கணமுடையது 

இலக்கண நெறி முறையாக வழங்கி வரும் சொற்கள் இலக்கணமுடையதாகும்.

உதாரணம்
காற்று  
நிலம் 
மண்

இலக்கணப்போலி 

இலக்கண நெறிமுறை இல்லையாயினும் , இலக்கணம் உடையது போல  சான்றோரால் தொன்று தொட்டு வரும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

உதாரணம்
இல்முன் -  முன்றில்
நகர்ப்புறம் -  புறநகர்
கோவில் -  கோயில்

மரூஉ

இலக்கணம் உடைய சொற்கள் சில இடையிலே எழுத்துக்கள் கெட்டும் , எழுத்துக்கள் திரிந்தும் , எழுத்துக்கள் தோன்றியும்  , மருவியும் வழங்கி வருதல் மரூஉ எனப்படும்.

உதாரணம்
பாண்டியநாடு -  பாண்டி நாடு
சர்க்கரை - சக்கரை
பெயர் - பேர்
தஞ்சாவூர் - தஞ்சை
கறிவேப்பிலை - கருவேப்பிலை

நன்றி 

Post a Comment

0 Comments