மகாபாரதம் பகுதி - 94 - MAHABHARATHAM PART - 94


மகாபாரதம் பகுதி - 94


மகாபாரதம் பகுதி - 94 - MAHABHARATHAM PART - 94

கிருஷ்ணா! உனக்கு தெரியாதது ஒன்றுமல்ல. பொய் சொல்வதால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், அன்பு, புகழ், செல்வம், பலம், பிரார்த்தனை பலன், தர்மம் முதலானவற்றால் சேர்த்த புண்ணியம்... இன்னும் எல்லாமே அழிந்து போகும் என்பது நீ அறியாததல்ல! மாயவனே! நீயே பொய் சொல்லத் துõண்டினால் உலகத்தில் தர்மம் என்னாகும்? என்றார் தர்மப்பிரபுவான தர்மராஜா. கடவுளே பொய் சொல்லத் துõண்டினாலும் கூட, அதிலுள்ள நியாய தர்மத்தை ஆராய்கிறான் மனிதனான தர்மன். மகாபாரதம் எவ்வளவு பெரிய நற்போதனையை மக்களுக்கு வழங்குகிறது பார்த்தீர்களா! இதுபோன்ற பக்தி நுõல்களை சிறுவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். கண்டகண்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, டிவியில் தேவையற்ற காட்சிகளைக் காட்டுவது ஆகியவற்றால் தான் சிறுவர்கள் இன்று கெட்ட வழக்கங் களுக்கு ஆளாகிக் கொண்டிருக் கின்றனர். மகாபாரதம் போன்ற தர்மநுõல்களை பெரியவர்களும் வாசிக்க வேண்டும். சிறுவர்களுக்கும் அதில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். மாயக்காரன் கிருஷ்ணனும் தர்மர் சொல்லும் அதே தர்மம் காக்கத் தானே இப்படி ஒரு போரையே நிகழ்த்துகிறார். அவரும் விடாப் பிடியாக பதில் சொன்னார்.தர்மரே! நீர் சொல்வது ஏற்கத்தக்கதே. ஆனால், ஒரு பொய் பல உயிர்களைக் காப்பாற்ற உதவுமானால், தர்மத்தைக் காக்க உதவுமானால் அதைச் சொல்வதில் தவறில்லை. ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் போக்க பொய்யும் பயனளிக்குமானால், அது உண்மை என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், தர்மத்துக்காக ஒரே ஒரு பொய் தான் சொல்லப் போகிறாய். ஓரிடத்தில் பெருநெருப்பு எரிவதாக வைத்துக் கொள். அதை ஒரு குவளை தண்ணீரால் அணைத்து விட முடியுமா? அந்தத் தீ கொழுந்து விட்டெரியத்தான் செய்யும். நீ செய்த தர்மத்தின் அளவையும், அதனால் கிடைத்துள்ள புண்ணியத்தின் அளவையும் பார்க்கும் போது, இந்தப் பொய் ஒருவேளை பாவத்தையே கொண்டு வருமானாலும் கூட, அது நீ சேர்த்து வைத்திருக்கும் புண்ணியத்தின் தன்மையை எந்த வகையிலும் பாதித்து விடாது, என்றார்.

கண்ணன் என்னும் மன்னன் சொல்லிவிட்டால் அங்கே மறுகருத்துக்கு ஏது இடம்? மறுத்தாலும் தான் அவன் விடுவானா என்ன? அந்த மாயவனின் பேச்சுக்கு தர்மர் கட்டுப்பட்டார். துரோணர் முன்பு தன் தேரில் போய் நின்றனர்.அவர் காதில் மட்டும் விழும்படியாக, ஐயோ! அசுவத்தாமா என்ற மதங்கொண்ட யானை இந்தப் போரில் பல வீரர்களை அழித்ததே! அதை பீமன் கொன்று விட்டானே, என்று மிக மெதுவாகச் சொன்னனர் சற்று அழுத்தமாக ஐயோ! அசுவத் தாமாவை பீமன் கொன்றானே. அவனது வீரத்தை எப்படி பாராட்டுவேன், என்று சற்று அழுத்தமாகச் சொன்னார். அவ்வளவு தான்! துரோணருக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. தன் மகன் அஸ்வத்தாமன் தான் இறந்தான் என நினைத்து வில்லைக் கீழே வீசிவிட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார். இதைப் பயன்படுத்திக் கொண்ட திரவுபதியின் சகோதரனான திருஷ்டத்யும்நன், அவர் மீது அம்பைத் தொடுத்தான். அது அவரது தலையைக் கொய்து விட்டது.இதுகண்டு கவுரவர் படை நடுங்கி விட்டது. அஸ்வத்தாமன் ஓடோடிச் சென்று தன் தந்தையின் பாதங்களை தன் தலை மீது துõக்கி வைத்துக் கொண்டு கதறினான்.என் அன்புத்தந்தையே! வில்லாற்றல், சொல்லாற்றல் ஆகியவற்றின் பிறப்பிடமான நீரா மறைந்தீர்! என்ன கொடுமை! உம்மைக் காப்பாற்ற இயலாமல், இந்த போர்க்களத்தில் நிற்கும் நான் உயிர் வாழத் தகுதியற்றவன். இவ்வுலகிலுள்ள அந்தணர்களெல்லாம் உம் வேத அறிவு கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்பார்களே! கண்ணனின் சொல் கேட்டு, சத்தியசீலரான தர்மரே பொய் சொன்னாரே! அதைப் பயன்படுத்தி உம்மிடமே வித்தை பயின்ற குரு துரோகியான திருஷ்டத்யும்நனும் உம்மைக் கொன்றானே! இதை நம்பாமல், நீர் வில்லெடுத்து போர் செய்திருந்தால் இந்த திருஷ்டத்யும்நன் என்ன! தேவர்களாலும் உம்மை ஜெயித்திருக்க முடியாதே! ஐயோ! உம்மைப் பிரிந்தும், இவ்வளவு நேரமும் என் உடலில் உயிர் தங்கியிருக்கிறதே, என முட்டி மோதி அழுதான்

தனது குருவின் மகன் தந்தையை இழந்து தவிப்பது கண்ட துரியோதனன், அவனைத் தரையில் இருந்து துõக்கி நிறுத்தி மார்போடு அணைத்து அஸ்வத்தாமா! என்ன இது! நீயே அழுதால் நம் நிலைமை என்னாகும்? என் குருநாதரின் இழப்பை என்னாலும் தாங்க முடியவில்லை. அவர் எனக்கு கற்றுத்தந்த அந்த பழைய நினைவுகளெல்லாம் என் நெஞ்சில் அலை மோதுகின்றன. எவ்வளவு பெரிய மாவீரரை இழந்து விட்டேன். சேனாதிபதியின்றி கலங்கி நிற்கிறது நம் படை! ஆனாலும், மரணத்தின் பிடியில் சிக்கியவர்களை மீட்பது என்பது எப்படி? நீ மனதைத் தேற்றிக்கொள், என்று ஆறுதல் சொன்னான்.பின்னர் பெரும் கோபமடைந்த அஸ்வத்தாமன், என் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்நனின் உயிரை வாங்கிய பிறகு தான் எனக்கு மறுவேலையே! என முழங்கியபடியே அங்கிருந்து ஆவேசமாகக் கிளம்பினான். இதைக் கண்ட கிருஷ்ணர், தன் தரப்பு மன்னர்களையெல்லாம் அழைத்து, உடனடியாக எல்லாரும் அவரவர் ஆயுதங் களைக் கீழே போட்டு விடுங்கள். தேர்களில் இருந்து இறங்கி கீழே நில்லுங்கள், என்று உத்தரவிட்டார். அஸ்வத்தாமன் பெரும் கோபத்துடன் வரும் போது, அவனை எல்லோருமாக சேர்ந்து எதிர்க்க வேண்டிய சூழலில், இந்த மாயவன் ஏன் இப்படி ஒரு உத்தரவு போட்டார் என யாருக்கும் புரியவில்லை. ஆனாலும், அவரது உத்தரவுக்கு எல்லாரும் பணிந்தனர், ஒரே ஒருவனைத் தவிர!

அவன்தான் பீமன்! எதற்கும் கலங்காமல் அவன் ஆயுதத்துடன் நின்றான். அப்போது அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை மந்திரம் சொல்லி பாண்டவர் படை மீது ஏவினான். அந்த அஸ்திரத்தில் இருந்து பெரும் காற்றில் வேகமாகப் பரவும் தீயைப்போல, அக்னி ஜுவாலை வெளிப்பட்டது. அதிலிருந்து இடி முழக்கம் போல சப்தம் வெளிப்பட்டது. அந்த அஸ்திரம் பாண்டவப்படையை நெருங்கிய உடன், அனைவரும் அதன் மீது கை வைத்து மிகுந்த பக்தியுடன் வணங்கினார்கள். உடனே அந்த அஸ்திரம் பூமியை நோக்கிப் பாய்ந்தது. பின்னர் மீண்டும் மேலெழும்பி யாராவது ஆயுதத்துடன் நிற்கிறார்களா? என பல திசைகளையும் சுற்றிப் பார்த்தது. பீமன் ஒருவன் மட்டும் ஆயுதத்துடன் நின்றான். அவனை நோக்கி அந்த அஸ்திரம் வேகமாகச் சென்றது. பல அஸ்திரங்களாக மாறியது. அவை அத்தனையும் தேவர்களால் பயன்படுத்தப்படும் அஸ்திரங்களாகும். பீமன், சற்றும் கலங்காமல் அந்த அஸ்திரங்களை நோக்கி முன்னேறிச் சென்றான். எந்த அஸ்திரத்தை, எந்த எதிர் அஸ்திரத்தால் அழிக்க முடியுமோ, அவற்றை ஏவினான். ஆனாலும், நாராயண அஸ்திரத்தின் சக்தி சற்றும் குறையவில்லை. அது மேலும் பல அஸ்திரங்களாக மாறி பீமனை நெருங்கியது. ஆனால், அவனது கண் களிலிருந்து வீசிய கோப ஜுவாலைக்கு அது கட்டுப்பட்டது. பல அஸ்திரங்களையும் பீமன் ஒடித்தெறிந்தான். பல அஸ்திரங் களை தோளில் தாங்கி வீரத்துடன் நின்றான். ஆனாலும், விதியை வெல்ல யாரால் முடியும்? நாராயண அஸ்திரத்துக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. தன்னை எதிர்ப்பவர்களை மட்டுமே அது அழிக்கும். ஆயுதமின்றி நிற்பவர்களை அது ஏதும் செய்யாது. அதன் காரணமாகவே கிருஷ்ண பரமாத்மா, வீரர்களிடம் ஆயுதங்களை கீழே போடச் சொன்னார். பீமன் ஒருவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அஸ்திரம் பீமனால் எத்தனையோ முறை தடுக்கப்பட்டபோதும், அதையெல்லாம் மீறி அவனது மார்பை நோக்கி பாய்ந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பீமனின் கையில் உள்ள வில்லையும், அம்பையும் அவனது தேரையும் மாயமாக மறையச்செய்துவிட்டார்.

உடனே நாராயண அஸ்திரம் அவனை அழிக்க தயங்கி, மீண்டும் அஸ்வத்தாமனிடமே போய்ச் சேர்ந்தது. அடுத்து அஸ்வத்தாமன் பாசுபதாஸ்திரத்தை பயன்படுத்த நினைத்தான். இந்த நேரத்தில் பிரம்மதண்டம் ஏந்தி வேதத்தை உச்சரித்தபடியே, வியாச முனிவர் அஸ்வத்தாமன் முன்பு தோன்றினார். அஸ்வத்தாமன் அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, பல்வேறாக போற்றித் துதித்தான்.வியாசர் அவனை மிகவும் புகழ்ந்தார். வீரனே! நீ வேலேந்திய சுப்பிரமணிய கடவுளுக்கு சமமானவன். பராக்கிரமம் உள்ளவன். உன்னிலும் வலிமை மிக்கவர்கள் இந்த போர்க்களத்தில் யாருமில்லை. துருபதன் பெற்ற ஒரு வரத்தின் காரணமாகவே, உனது தந்தையாகிய துரோணரை திருஷ்டத்யும்னனால் அழிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அவரை யாரும் ஜெயித்திருக்க முடியாது. இனி நீ சிவபெருமானை தியானம் செய்! கடும் தவம் புரி! இந்த பிறவியே வேண்டாமென அவரிடம் வேண்டுகோள் வை. ஐம்புலன்களையும், ஆசைகளையும் அடக்குபவனுக்கு சிவதரிசனம் கிடைக்கும், என உபதேசம் செய்து மறைந்தார்.இதற்குள் சூரியன் அஸ்தமிக்கவே, பதினைந்தாம் நாள் போர் நிறைவுக்கு வந்தது. அன்று இரவில் நடந்த பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் துரியோதனன், தனது படைக்கு கர்ணனை சேனாதிபதி ஆக்குவதென முடிவு செய்தான். இந்த விஷயத்தையும், துரோணர் இறந்து போன விஷயத்தையும் சஞ்சய முனிவரிடம் சொல்லி, திருதராஷ்டிரனிடம் கூறுமாறு அனுப்பி வைத்தான். துரோணரின் இறப்புச்செய்தி கேட்டு திருதராஷ்டிரன் மிகவும் வருந்தினான். மறுநாள் பொழுது விடிந்தது. சூரிய பகவான் அன்று சற்று முன்னதாகவே வந்து விட்டான். ஏனெனில் தனது மகன் கர்ணன், தளபதி ஆனது கண்டு அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாண்டவர்களுடன் அவன் நிகழ்த்தப்போகும் போரை பார்வையிடுவதற்காக முன்கூட்டியே தோன்றிவிட்டான்.துரியோதனன் மிகுந்த நம்பிக்கையுடன் களத்திற்கு வந்தான். பீஷ்மரையும், துரோணரையும் இழந்த பிறகும்கூட, தனது படைக்கு கர்ணன் தலைவனாக இருக்கிறான் என்பதில் அவனுக்குப் பெரும் சந்தோஷம்.

கர்ணன், சேனாதிபதி ஆனதில் கவுரவப் படைகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவனது தலைமையில் எப்படியாவது பாண்டவர்களை வென்றுவிடலாம் என்றே அவர்கள் கருதினார்கள். இதன் காரணமாக களத்தில் ஆவேசமாக நின்றார்கள். பாண்டவர் படைகளுக்கும் அன்று மிகுந்த மகிழ்ச்சி. துரோணரும், பீஷ்மரும் இல்லாத கவுரவ படையை ஜெயிப்பது மிகவும் எளிது என்றே அவர்கள் கருதினார்கள். பீமன் ஒரு யானையின் மீது ஏறி, ஆவேசத்துடன் களத்திற்குள் நுழைந்தான். அவனை எதிர்த்து காசி நகர ராஜனாகிய கேமதுõர்த்தி என்பவன் மற்றொரு யானையில் வந்தான். இருவரும் யானையில் அமர்ந்தபடியே பாண பிரயோகம் செய்தனர். கேமதுõர்த்தியின் யானையை பீமன் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்று விட்டான். கேமதுõர்த்தியும் அவ்வாறே பீமனின் யானையைக் கொன்று விட்டான். பின்னர் இருவரும் கதாயுதத்தால் மலையும், மலையும் மோதியது போல் கடும் யுத்தம் செய்தனர். இறுதியில் பீமன், கேமதுõர்த்தியை தன் கதாயுத்தால் உக்கிரமாக தாக்கியதில் அவன் மடிந்து போனான். இதுகண்டு கவுரவப்படைகள் சிதறி ஓடின. கர்ணன் அவர்களுக்கு தைரியம் கொடுத்தான். எக்காரணம் கொண்டும் பின்வாங்கக்கூடாது என உத்தரவிட்டான். இந்த நேரத்தில் நகுலன், தனது குதிரை மீது ஏறி கர்ணனை நோக்கிப் பாய்ந்து சென்றான். இருவரும் மிகக்கடுமையாக யுத்தம் செய்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏராளமான அம்புகளைத் தொடுத்தனர். பின்னர் இருவரும் அவரவர் தேரில் ஏறி நின்றபடியே அம்பு மாரி பொழிந்தனர். சமபலம் பொருந்தியவர்களாக இருந்ததால், இந்த போர் நீண்ட நேரம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் நகுலனுக்கு ஏற்பட்ட அம்புக்காயங்கள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவன் தளர்வடைந்தான். இந்நேரத்தில் கர்ணன் நினைத்திருந்தால் அவனைக் கொன்றிருக்க முடியும். ஆனால், தன் தாய் குந்திக்கு தன் தம்பியரைக் கொல்வதில்லை என வாக்கு கொடுத்திருந்தது நினைவிற்கு வந்தது.

தொடரும் .....

 

Post a Comment

0 Comments