ஐக்கிய நாடுகள் சபை - UNITED NATION ORGANIZATION (UNO)


ஐக்கிய நாடுகள் சபை


ஐக்கிய நாடுகள் சபை - UNITED NATIONS

இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இடை நடுவில் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்லின் ரூஸ்வெல்ட் 1941 ஆகஸ்ட் மாதம் அத்திலாந்திக் பிரகடனத்தில் கையொப்பம் இட்டனர். நட்பு நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்திய இந்த ஆவணங்கள் சமாதானத்திற்காக சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல், நாடுகளின் சுயாதீனம் மற்றும் சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாசிங்டன் நகரில் அச்சு நாடுகளுக்கு எதிராகச் சண்டையிட்ட 26 நாடுகளின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதன்போது இந்த நாடுகளை அழைப்பதற்கு ஐக்கிய நாடுகள் என்ற சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1943 ஒக்டோபர் மாதம் ரஷ்யா, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மொஸ்கோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகச் சர்வதேச நாடுகளின் அமைப்பொன்றை அமைப்பது குறித்துக் கலந்துரையாடினர். கி.பி 1943 டிசெம்பர் மாதத்தில் டெஹரான் நகரில்,
அமெரிக்க ஜனாதிபதி பிரேங்களின் டி. ரூஸ்வெல்ட்
பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில்
ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்

ஆகிய உலக வல்லரசுகள் மூன்றின் தலைவர்கள் இது குறித்து மென்மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக உலக அமைப்பொன்றை அமைக்க வேண்டும் என்ற யோசனையை மேற்குறித்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்படி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கும் கொள்கையாக ஐக்கிய நாடுகளின் கொள்கைப் பிரகடனத்தை வடிவமைப்பதற்காக 1945 ஜூன் மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். மகாநாட்டில் பங்குபற்றாத போலந்தும் பின்னர் பிரகடனத்தில் கைச்சாத்திட்டது. இதன்படி ஆரம்ப அங்கத்தவர் தொகை 51 ஆகும். 1945 ஒக்டோபர் 24 ஆந் திகதி பிரகடனம் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை உத்தியோக பூர்வமாக உதயமாகியது. அதனால் ஒக்டோபர் 24 ஆந் திகதி ஐக்கிய நாடுகளின் தினம் எனக் கருதப்படுகின்றது.

ஐ.நா சபையானது இருமுறை மனித சமுதாயத்திற்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்திய யுத்தம் எனும் பேரின்னலிலிருந்து எதிர்காலப் பரம்பரையைக் காப்பாற்றல், அடிப்படை உரிமைகள் மீதும் மானிடத்தின் கெளரவத்தின் மீதும், மதிப்பின் மீதும், பெரிய சிறிய அரசுகளினதும், ஆண் பெண் இருபாலினதும் சம உரிமைகள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக தோற்றம் பெற்றதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்

ஒவ்வொருவரினதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சமாதானமாக நல்ல அயலவராக, நட்புறவுடன் வாழவும் சர்வதேச சமாதானத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட மக்களின் சக்தியை ஒன்றிணைத்தல்.

இச்சங்கத்தின் நாடுகளுக்கிடையே மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான வழிகளை இலகுவாகப் பெற்றுக் கொடுத்தல்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அடிப்படைகளை தீர்ப்பதற்கு தலையிடல்.

பொது நன்மைக்காக அல்லாது வேறு எக்காரணத்திற்காகவும் ஆயுத பலத்தை உபயோகிப்பதில்லை எனும் கொள்கையுடன் சகல மக்களின் பொருளாதார அபிவிருத்தியுைம் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தல்.

இன, மத, மொழி, பால் வேறுபாடு கருதாது மனித உரிமைகளைப் பாதுகாத்தல்,

நாடுகளின் உரிமைகளையும் பாதுகாத்தல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல்.

மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐ.நா.சபை பெரும் பங்காற்றி வருகின்றது. தனியொரு நிறுவனமாக இருந்து செயற்பட்டு உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியாது. அதனால் ஐ.நா.சபை தனக்கு கீழே தனது கட்டுப்பாட்டினுள்பல கிளை நிறுவனங்களை அமைத்துள்ளது. பல தனியார் நிறுவனங்களும் ஐ.நா.சபையில் தம்மை இணைத்துக் கொண்டு அங்கீகாரம் பெற்று மனித உரிமைகளைப் பாதுகாத்து வருகின்றது.

ஐ.நா.சபை தனது பிரதான குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக 1948 டிசம்பர் 10 இல் வெளியிட்ட மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனம் முக்கிய இடம்பெறுகின்றது. இதன் மூலம் சகல மக்களும் சுயகௌரவத்துடன் சமமானவர்களாக வாழும் உரிமையை உறுதிப்படுத்தி அங்கத்துவ நாடுகளுடன் ஒப்பந்தம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது மனித உரிமைகள் பற்றிய முதன் முதல் வெளியீடாகும். இதில் காணப்படும் 30 உரிமைகளைக் கூறி அதை யாவரும் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துகின்றது.

மானிட வர்க்கத்தினருக்கு கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், நம்பிக்கை. வழிபாடுகளை செயற்படுத்தும் சுதந்திரம், அச்சம் மற்றும் வறுமையை அகற்றும் சுதந்திரம் ஆகியவற்றுடன் சமூக வாழ்க்கையை மிகச் சிறப்பாக அனுபவிப்பதும் பொதுமக்களின் மேன்மையான ஒரே எதிர்பார்ப்பாகும்.

மனித உரிமைகள் பற்றிய பல்வேறு விடயங்களிலும் ஐ.நா.சபை கவனம் செலுத்தியது.

அடிமைநிலை, அடிமைத்தனம்

பலாத்காரமாக வேலை செய்வித்தல் போன்ற நடத்தைகளையும், நிறுவனங்களையும் ஒழித்தல்.

இனப்படுகொலையாகிய குற்றம் செய்வதைத் தடுத்தல் அல்லது அதற்குத் தண்டனை விதித்தல்.

மதப் பொறுமையின்மையை அகற்றுதல்.

இன ஒதுக்கலை முற்றாக அழித்தல்.

பிடித்த ஆள் புலங்களிலும் படைக்கருவி தாங்கிய சண்டைகளின் போதும் கவனிக்க வேண்டிய மனித உரிமைகள்

முன்னர் குடியேற்ற நாட்டு ஆதிக்கத்திலிருந்த பல நாடுகள் ஸ்தாபனம் நிகழ்த்தியுள்ள குறிப்பிடத்தக்க விருத்தியாகும். ஆளப்பட்டு வந்த மக்களின் அவாவுக்கு ஊக்கமளித்து அவை சுதந்திரமாவதை விரைவுபடுத்தும் பொருட்டு இலக்குகளையும் தரங்களையும் ஐ.நா ஏற்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதான ஆறு நிறுவகங்களைக் கொண்டதாகும்.

1. பொதுச் சபை
2. பாதுகாப்புச் சபை
3.சமூகப் பொருளாதார சபை
4. நம்பிக்கை பொறுப்புச் சபை
5.சர்வதேச நீதிமன்றம்
6. செயலகம்

பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத் தும் அமைப்பே பொதுச் சபையாகும். இதன் அங்கத்துவ நாடுகளின் தொகை 193 ஆகும். ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் இந்தச் சபை கூடும். பொதுச் சபையில் அனைத்து நாடுகளும் சம அந்தஸ்து உடையவை யாகும். ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிற் கும் ஒரு வாக்கு உரித்துடையது. பொதுச் சபையின் பிரதான செயற்பாடுகளும் அதிகாரங்களும்,

சர்வதேச சமூகத்தின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான எந்த வொரு பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அது பற்றிய சிபாரிசு அறிக்கையை முன்வைத்தல். மற்றும் அங்கத்துவ நாடுகளின் பொருளாதார, சுகாதார, மனித உரிமைகள் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான ஆலோச னைகளை முன்வைத்தல்.

ஐக்கிய நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அனுமதி வழங்குவதோடு வழங்க வேண்டிய உதவி நிதியை அங்கத்தவரிடையே பகிர்ந்து ஒதுக் குதல்.

பாதுகாப்புச் சபையின் சிபாரிசின்படி செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்தல்.

சர்வதேச நீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும் புதிய அங்கத்துவ நாடுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்.

பாதுகாப்புச் சபை

இந்தச் சபையில் 15 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்புரிமை நாடுகளாகும். ஏனைய 10 நாடுகளின் உறுப்புரிமை இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகள் ஐந்திற்கும் வீற்றோ எனப்படும் இரத்துச் செய்யும் அதிகாரம் உண்டு. இரத்துச் செய்யும் அதிகாரம் என்பது நிரந்தர உறுப்புரிமை நாடுகளில் ஒரு நாடு விரும்பாவிட்டாலும் எதிர்த்து வாக்களித்து அத்தீர்மானத்தை இரத்துச் செய்யும் உரிமையாகும். பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அங்கத்தவர்களும் பொறுப்புடையவர்களாவர்.

சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் மோதல்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து அவற்றை சமாதானமாகத் தீர்ப்பதற்கு சிபாரிசுகளை முன் வைப்பது பாதுகாப்புச் சபையின் பிரதான கடமையாகும். ஏதாவதொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதும் தேவையேற்பட்டால் போர்ப்பலத்தை உபயோகிப்பது போன்ற செயற்பாடுகள் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.

சமூக பொருளாதார சபை

இச்சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 54 ஆகும். அங்கத்துவக் காலம் மூன்று வருடங் களாகும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் உலக மக்களின் பொருளாதார, சமூக, கலாசார, கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தியை மேற்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இச்சபையானது தனது பணியை நிறைவேற்றிக் கொள்வதற்கு இணை நிறுவனங்கள் பலவற்றின் உதவியினைப் பெற்றுக் கொள்கின்றது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO)
உணவு விவசாயத் தாபனம் (FAO) 
ஐக்கிய நாடுகளின் கல்வி
விஞ்ஞான மற்றும் கலாசார தாபனம் (UNESCO)
சர்வதேச நாணய நிதியம் (IMF)
உலக சுகாதார தாபனம் (WHO) 
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியம் (UNICEF) 

என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.

நம்பிக்கை பொறுப்புச் சபை

இச்சபையின் பிரதான கடமை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நம்பிக்கை பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட பிரதேசங்களை நிருவகித்தலாகும். ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நம்பிக்கை பொறுப்பின் கீழ் 11 நாடுகள் இருந்தன. 1994 ஆம் ஆண்டளவில் சகல நம்பிக்கை பொறுப்புப் பிரதேசங்களும் தமது சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டன. அன்று முதல் இச்சபை செயலற்றுக் காணப்படுகின்றது. செயலாளர் நாயகத்தின் சிபாரிசின்படி நம்பிக்கைப் பொறுப்புச் சபையை அகற்றுவதற்கு 2005 இல் உலகத் தலைவர்களின் மகாநாடு தீர்மானித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நீதிமன்றம் சர்வதேச நீதிமன்றமாகும். நெதர்லாந்தின் ஹேக் நகரில் அது அமைந் துள்ளது. அங்கத்துவ நாடுகளின் நீதி மன்றங்களில் உயர் பதவி வகித்தோர் சர்வதேச சட்டம், தொடர்பான சிறப்புத் தேர்ச்சி பெற்றோர் ஆகியோரிலிருந்து நீதிபதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கல் சர்வதேச நீதிமன்றத்தின் பிரதான செயற்பாடாகும். அவ்வாறே அங்கத்துவ நாடுகளிடையே எழும் சிக்கல்கள் தொடர்பாக சட்டரீதியான தீர்வினைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் இந்த நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.

செயலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிருவாக அலுவலகம் செயலகம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இது அமைந்துள்ளது. பாதுகாப்புச் சபையின் சிபாரிசிற்கு அமைய பொதுச்சபையால் 5 வருட காலம் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படும். செயலாளரே இதன் பிரதான நிருவாகி ஆவார். சர்வதேச சமாதானத்திற்கு அச்சுறுத் தலாக அமையக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளையும் பாதுகாப்புச் சபைக்கு முன்வைப்பதற்கு செயலாளருக்கு அதிகாரம் உண்டு. இச்செயலகத்திற்குரிய பல செயலகங்கள் உலகெங்கும் இயங்கி வருகின்றன. அவற்றின் அங்கத்தவர் தொகை ஒன்பதாயிரம் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சிகள்

எதிர்காலச் சந்ததியினரைப் பேரழிவுமிக்க யுத்த அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அணுவாயுத ஆணைக் குழுவை அமைத்து தனது பணியை ஆரம்பித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண் டினால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக அணுசக்தியைக் கட்டுப்படுத்தும் தேவையை உலகிற்கு உணர்த்த ஆரம்பத்திலேயே இத்தகைய செயலில் இறங்கி இருக்க வேண்டும்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தமது தலைமையில் உருவாக்கிய இரு முகாம்களைத் தத்தமது வெற்றிக்காக தந்திரோபாயங்களை கடைபிடித்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்தன. ஆயுதப் பாவனையைத் தவிர்த்து இவர்கள் மேற்கொண்ட இச்செயற்பாடானது பனிப் போர் அல்லது கெடுபிடி யுத்தம் என அழைக்கப்பட்டது. இந்நிலையின் கீழ் மோதல் ஏற்படவிருந்த பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் சபை அவற்றில் தலையிட்டு மோதலில்லாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டது. அத்தகைய சம்பவங்களுக்கு சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுயஸ் கால்வாய் நெருக்கடி

எகிப்திய மிசிர் ஜனாதிபதி அப்துல் கமால் நாசர் சமவுடைமைப் பொருளாதார முறையைப் பின்பற்றி சுயஸ் கால்வாயை மக்கள் மயப்படுத்தினார். இதனால் பிரான்சிய நிறுவனம் நெருக்கடியைச் சந்தித்தமையால் இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் பிரான்சியப் படைகள் சுயஸ் கால்வாய் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட்டுப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்தது. 

வளைகுடா நெருக்கடி

இந்த நெருக்கடிக்கு ஈராக் மற்றும் குவைட் என்பவற்றின் எல்லையில் அமைந்திருந்த எண்ணெய் படிவுகளே காரணமாக அமைந்தது. இதனால் ஈராக்கினால் குவைட் ஆக்கிரமிக்கப்பட்டது. உலக யுத்தத்திற்கு அடுத்த மிகப் பெரிய யுத்தம் என்பதால் பேரழிவுகள் ஏற்பட்டன. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் இந்த நெருக்கடியை சுமுகமாகத் தீர்க்க முடிந்தது.

கியூபாவின் ஏவுகணை நெருக்கடி

கியூபாவில் புரட்சி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற குழுவினர் ஐக்கிய அமெரிக்காவில் யுத்தப் பயிற்சி பெற்று பிடெல் கெஸ்ரோவின் சமவுடைமை அரசுக்கு எதிராக ஆயுதம் தரித்து வருகை தந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா உதவி வழங்கியதாகக் கூறி அந்நாட்டை தாக்கக் கூடிய ஏவுகணைகள் ரஷ்யாவால் கியுபாவில் பொருத்தப்பட்டன. இதனால் அமெரிக்காவால் கியூபா சுற்றி வளைக்கப்பட்டு ரஷ்யாவை இலக்கு வைத்து துருக் கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் தலையீட்டினால் தீர்க்கப்பட்டது.

உலக சமாதானத்திற்குப் பாதகம் விளையும் சந்தர்ப்பங்களில் அங்கு தலையிட்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஐ.நா. சபைக்கு உண்டு. எனினும், 1ம் தசாப்தங்களில் கெடுபிடிப் போர் நிலவிய போது அதனை தடுக்க பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்தன.

பிணக்குகளின் போது நேரடித் தலையீடு : 1950 - 1953 கொரியப் பிணக்கு, 1960 - 1964 கொங்கோப் பிணக்கு.

எனைய பல பிணக்குகளின்போது முரண்பாடுகளைத் தீர்க்கவும் மீண்டும் அவ் அணியினரிடையே முரண்பாடுகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டமை.

ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டோ அல்லது மூன்றாம் நபரின் உதவியுடன் கலந்தாலோசித்தோ முரண்பாடுகளைத் தீர்த்தமை.

தடைகள் விதிப்பதன் மூலம் அழுத்தங்கள் கொடுத்தமை (தென்னாபிரிக்கா, ரொடீசியா)

பிணக்குகளில் ஈடுபட தேச எல்லையில் சமாதானப் படைகளை நிறுத்தியமை.

போரில் இடம்பெயர்ந்தோருக்கு புகலிடம் வழங்கியமை.

காஷ்மீர் பிரச்சினை (1947-1948), பாலஸ்தீன் பிரச்சினை (1947), சைப்பிரிஸ் பிணக்கு (1964), லெபனான் பிணக்கு (1978). போன்றனவற்றின் போது இரு அணிகளுக்குமிடையே போர் ஏற்படாது தடுக்க சமாதானப் [1651 6501 அனுப்பியமை.

இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க தனது பங்களிப்பை வழங்கியமை.

தற்கால உலகில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளிடையே ஏற்பட்ட பல மோதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்ட விதத்தை மேலே அவதானித்தோம். நாடுகளிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைத்து உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் பல உள்ளன. உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலையீட்டினால் சிக்கல்களைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேசரீதியில் சமாதானம், பாதுகாப்பு என்பன நிலவுவதற்கான முக்கிய பொறுப்பு பாதுகாப்புச் சபையிடம் இருப்பது அதற்கான காரணமாகும்.

பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின்படி உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பல கீழே தரப்படுகின்றன.

பொருளாதாரத் தடை விதித்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் அந்தத் தீர்மானத்தை செயற்படுத்த சம்பந்தப் பட்ட நாடுகளை இணக்கத்திற்கு உட்படுத்த முடியும்.

அணு ஆயுதங்களைக் குறைக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.

குறிப்பிட்ட நாடுகளில் புதிதாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகத் தகவல் கிடைத்ததும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவை அனுப்பி நிலைமையைப் பரிசீலிக்கின்றது. வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரித்த போது இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

சமாதானப் படையை ஈடுபடுத்தல்

இரு பிரிவினரிடையே கடும் போர் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படை ஈடுபடுத்தப் படுகின்றது.

நன்றி 

Post a Comment

0 Comments