சர்வதேச சங்கம்
1919 இல் நடத்தப்பட்ட பரிஸ் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தவும் மீண்டும் இத்தகையதொரு யுத்தம் ஏற்படு வதைத் தவிர்ப்பதற்காகவும் சர்வதேச அமைப்பொன்றை அமைப்பதன் தேவை உணரப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி வூட்ரோ வில்சன் அதற்காக முனைப்புடன் செயற்பட்டார். அதன்படி 1920.01.10 ஆந் திகதி அவ்வமைப்பு உருவானது அதன் பெறுபேறே ஆகும். ஆரம்பத்தில் இவ்வமைப்பில் 42 நாடுகள் அங்கம் வகித்தன.
சர்வதேச சங்கம் உருவாக்கியதன் நோக்கம்.
சர்வதேச சங்கம் சமாதானத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள்
சர்வதேச சங்கம் உருவாகி 20 வருடகாலம் போர் நிகழாமல் தவிர்த்ததில் இச்சங்கம் வெற்றி கண்டது. இச்சங்கம் உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் சிறிய நாடுகளும் பெரிய நாடுகளும் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சர்வதேச சங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு மதிப்பளித்தமையே அதற்குக் காரணமாகும். சர்வதேச சங்கத்தின் முயற்சிகள் வெற்றியளித்த சில சந்தர்ப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
சுவீடனுக்கும் பின்லாந்துக்கும் ஜேர்மனிக்கும் போலந்திற்கும் கிரேக்கத்திற்கும் பல்கேரியாவிற்கும் ஈரான் மற்றும் துருக்கிக்குமிடையே ஏற்பட்ட யுத்த முரண்பாடு களைத் தவிர்த்தமை.
அகதிகள் புனர்வாழ்விற்காக நடவடிக்கை எடுத்தமை.
முதலாம் உலக மகாயுத்தத்தின் பின் சர்வதேச சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பின் கீழிருந்த குடியேற்ற நாடுகள் குறித்த மேற்பார்வை நடவடிக்கைகளை வெற்றி கரமாகச் செய்தமை.
சட்டவிரோதமான அடிமை வியாபாரத்தையும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டமை.
சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்கள்
உலக சமாதானத்தைப் பாதுகாப்பதும் மீண்டும் யுத்தம் மூள்வதைத் தவிர்ப்பதுமே சர்வதேச சங்கத்தை அமைத்ததின் அடிப்படை நோக்கமாக இருந்தது. எனினும் சங்கம் அமைக்கப்பட்டு 20 வருடங்கள் கழிவதற்கு முன் முதலாவது உலக மகா யுத்தத்தின் காரணகர்த்தாவான ஜேர்மனியின் தலைமையில் இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டது. மீண்டும் யுத்தம் ஏற்படுவதைத் தவிர்ப்பதில் சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி அடைந்தமை இதன் மூலம் தெளிவாகின்றது. இவ்வாறு சர்வதேச சங்கம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் பின்வருமாறு.
உலகின் செல்வந்த நாடாகவும் போர்ப் பலமிக்க வல்லரசாகவும் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்க அரசுகள் சர்வதேச சங்கத்தில் இடம்பெறாதது அதன் தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச சங்கம் அங்கத்துவ நாடுகளின் தேவைகளைக் கருதி உருவாக்கப்பட்ட சங்கத்தின் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ள அமெரிக்காவின் செனட் சபை விரும்பவில்லை. இதனால் வல்லரசான அமெரிக்கா சர்வதேச சங்கத்தில் அங்கத்துவம் பெறாமையால் அதன் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான தேவை அதற்கு இருக்கவில்லை. இது சங்கத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதேபோல் உலகின் மற்றொரு வல்லரசாகிய ரஷ்யாவை சர்வதேச சங்கத்தில் இருந்து தூர ஒதுக்கி வைத்தமை அதன் பலவீனத்துக்குக் காரணமாக அமைந்தது.
சர்வதேச சங்கம் எடுத்த தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்காக அங்கத்தவ நாடுகளை நிர்ப்பந்திப்பதில் சர்வதேச சங்கம் தோல்வி அடைந்தது. சங்கத்தின் தீர்மானத்தை அங்கத்துவ நாடுகளை நிர்ப்பந்தித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான சக்தி அதனிடம் இல்லாமையே இதற்கான பிரதானமான காரணமாகும். இதற்காகப் பயன்படுத்தக்கூடிய இராணுவமொன்று சங்கத்திடம் இல்லாமையும் ஏதாவதொரு சமாதானப் படையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமையும் முக்கிய குறைபாடாகும்.
சர்வதேச சங்கத்தில் அங்கத்துவம் வகித்த பலம் வாய்ந்த நாடுகளுக்கிடையே ஒற்றுமை இன்மையும், சில காரணங்களினால் அவர்கள் பொதுத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி தமது நோக்கங்களைப் பின்தள்ளுவதற்கு விரும்பாமையும் சங்கம் முகங்கொடுத்த பெரும் சவாலாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன் ஜேர்மனி சர்வதேச சங்கத்தில் இருந்து விலகும் பொழுது சங்கத்தின் அங்கத்துவ நாடுகள் அதனைப் பெரிதும் பொருட்படுத்தவில்லை. ஜேர்மனியின் கம்யூனிசக் கொள்கைகையை நசுக்கும் செயற்பாட்டிற்கு ஏனைய மேற்குலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்தமையே அதற்கான காரணமாகும்.
உலக சமாதானம் மீறப்பட்ட சில சந்தர்ப்பங்களில் அந்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சங்கத்தால் முடியாமல் இருந்தது. இத்தாலி அபிசீனியாவை ஆக்கிரமித்தபோது இத்தாலிக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் அதனைச் சரியாக நடத்தச் சங்கத்தால் முடியாமல் போனது.
ஜப்பான் மஞ்சூரியாவை ஆக்ரமித்தபோது ஜப்பானுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இவ்வாறு சர்வதேச சங்கத்தின் தோல்விகளின் விளைவாக மீண்டும் ஒரு முறை உலக யுத்தமொன்று ஏற்பட்டது. அதுவே இரண்டாம் உலக மகாயுத்தமாகும்.
நன்றி
0 Comments