1815 கண்டி உடன்படிக்கை - 1815 KANDY AGREEMENT


1815 கண்டி உடன்படிக்கை

1815 கண்டி உடன்படிக்கை - 1815 KANDY AGREEMENT


1815 மார்ச் 2ஆந் திகதி கண்டி அரச சபை (மகுல்மடுவ) மண்டபத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சார்பாக ஆளுநர் பிரௌன்றிக் கண்டி மக்கள் சார்பாக அதன் பிரதானி களுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. அது கண்டி உடன்படிக்கை எனப்படுகின்றது.

அரச சபையில் கூடியிருந்தோருக்கு உடன்படிக்கையின் வாசகங்களை வாசித்து விளக்கிய பின்னர், அவர் கையொப்பம் இடுவதற்கு முன்னர் சிங்கக் கொடியைக் கீழிறக்கி, ஆங்கிலேயக் கொடியை ஏற்றியபோது, வாரிய பொல ஸ்ரீ சுமங்கல தேரர், ஆங்கிலக் கொடியைக் கீழிறக்கி சிங்கக் கொடியை மீளவும் ஏற்றியதாகக் கருத்தொன்று நிலவுகின்றது. சில தகவல்களின் பிரகாரம் ஆளுநர் பிரௌன்றிக்கும் பிரதானிகள் சிலரும் உடன்படிக்கையில் கையொப்பம் இட்டிருப்பது மார்ச் 10 ஆந் திகதியாகும்.

கண்டி உடன்படிக்கை என்பது கண்டி இராச்சியம் பிரித்தானியருக்கு அடிமைப் பட்டமையை உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆவணமாகும். இவ்வுடன்படிக்கையின் முதல் மூன்று வாசகங்களும் இராஜசிங்க மன்னனுக்கும் அவரது உறவினர்களுக்கும் கண்டி இராச்சியம் சிம்மாசனத்தின் மீதிருந்த சகல உரிமைகளையும் நீக்கிவிட்டது. நான்காம் வாச கம் கண்டி இராச்சிய ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது என்பதுடன் மலைநாட்டு பிரதானிகளின் உரிமைகளும் சலுகைகளும் பாதுகாக்கப்படும் வண்ணம் ஆங்கிலேயர் ஆட்சி புரிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வாசகத்தில் சாசனமும் கிறிஸ்தவ சமயமும் தடையின்றிச் செயற்படுவதுடன் புத்த பிக்குகளும் விஹாரைகளும் தேவால யங்களும் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஏனைய வாசகங்களில் கண்டி இராச்சிய நீதி முறைமையின் செயற்பாடு விவரிக்கப்பட்டுள்ளது.

கண்டி உடன்படிக்கை கையொப்பமானதுடன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்புடன் திகழ்ந்த இந்நாட்டின் சுதந்திரம் முற்றிலும் இழக்கப்பட்டு இலங்கை முழுமையாக அந்நியராட்சிக்கு உட்பட்ட நாடாக மாறியது. ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர் மலைநாட்டுப் பிரதேச நிருவாகத்திற்காக ஆளுநரின் வதிவிடப் பிரதிநிதியாக ஜோன் டொயிலி என்பவரை நியமித்தனர். அவரது அலுவலகத்தை கண்டி நகரில் நிறுவி, அவருக்குத் துணையாக அதிகாரிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. பிரித்தானியர் ஆட்சியின்கீழ் பணியாற்ற விரும்பிய பிரதானிகளுக்கு ஆங்கிலேய ஆட்சியால் பதவிகள் வழங்கப் பட்டன. இதற்கமைய மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக சுயாதீன ஆட்சிக்குப் பழக்கப்பட்டிருந்த கண்டி மக்கள் வெளிநாட்டு ஆட்சியாளர் குழுவினரால் மேற் கொள்ளப்பட்ட ஆட்சி முறையின் கீழ் வாழ நேரிட்டது.

நன்றி 

Post a Comment

0 Comments