1818 சுதந்திரப் போராட்டம்
1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றியமையால், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னரின் கொடூர ஆட்சியிலிருந்து கண்டி மக்கள் விடுவிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை தொடர்பாக அவர்களிடம் வரவேற்பு இருக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளாக போர்த்துக்கேய, ஒல்லாந்தர் முதலிய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உயிர்த் தியாகத்துடன் கட்டிக்காக்கப்பட்ட சுதந்திரம் தற்போது தம்மிடம் இல்லாதிருப்பதை அதிக காலம் செல்வதற்கு முன்னரே கண்டி மக்கள் விளங்கிக் கொண்டனர். இதனால் 1818, 1848 ஆம் ஆண்டுகளில் தாம் பழக்கப்பட்டிருந்த போராட்ட முறைகளைக் கையாண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுச்சியுற்றனர். ஆங்கிலேயர்களால் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்ட இவ்வெழுச்சி, சுதேசிகளின் பார்வையில், அந்நியர்களைத் துரத்தி, தாம் இழந்த சுதந்திரத்தை மீளவும் அடைந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட எத்தனமாகக் கருதப்படுகின்றது. ஆகையால் அவை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுதந்திரப் போர்களாகும். இப்போது நாம் 1818 ஆம் ஆண்டுப் போராட்டம் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.
1818 சுதந்திரப் போராட்டம்
1817 செப்டெம்பர் மாதத்திலிருந்து 1818 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை கண்டியில் நிலவிய ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆயுதபாணிகளாகக் கிளர்ந்தெழுந்தமை முதலாவது சுதந்திரப் போராட்டம் எனப்படுகின்றது. கண்டியில் ஆங்கிலேயர் ஆட்சி உருவாகி மூன்று ஆண்டுகள் செல்வதற்கிடையில் பிரதானிகளும் சாதாரண மக்களும் இவ்வாறான போராட்டத்திற்கு முன்வந்ததற்கு, ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்டிருந்த கடும் வெறுப்பே காரணமாகும். 1818 போராட்டத்திற்குப் பொதுமக்கள் தூண்டப்பட்டதற்குக் காரணங்கள் பல காணப்பட்டன.
1818 சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள்
சுதந்திரத்தை இழந்தமையும் அரசன் இல்லாமையும் பற்றிய மனவேதனை.
கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சி நிலவியபோதும் தம்முடைய ஆட்சியில் சுதந்திரத்தை அனுபவித்து வந்த கண்டி மக்கள் 1815 ஆம் ஆண்டைத் தொடர்ந்து தமக்குப் பழக்கப்பட்டிருந்த ஆட்சி முறை கைவிட்டுப் போனமையால் வேதனையடைந்தனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாடு அடிமைப்பட்டதன் பின்னர் பிரித்தானிய அரசரே கண்டி இராச்சியத்திற்கும் அரசர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் மக்கள் ஒருபோதும் அவரைக் கண்டதில்லை. கண்டி மக்களுக்குத் தேவைப்பட்டது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு நாட்டிலுள்ள கண்காணாத மன்னர் அல்ல. தமது தலை நகரில் வாழந்து தமது துன்ப துயரங்களை முன்வைத்து நிவாரணம் பெறக்கூடிய மன்னர் ஒருவரேயாகும். இவ்வாறான இடத்தில் மன்னர் ஒருவர் இல்லாமையால் தாங்கள் அனாதரவானவர்கள் என்ற உணர்வு கண்டி மக்களிடையே நிலவி வந்தது. அக்காலத்தில் மலைநாட்டில் வாழ்ந்த பிக்கு ஒருவர் பாடியதாக கூறப்படும் கவிதையில் அரசர் ஒருவர் இல்லாமையால் அவர்கள் அடையும் மனச்சஞ்சலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐயோ எறும்புகளே! உங்களுக்கென்று அரசர் இருக்கின்றார் நாம் என்ன செய்வது? இது எங்கள் விதியா?
அரசர் ஒருவர் வாய்க்கப் பெற்றால், அன்று பாற்சோறுண்போம். ஊர்வலம் போவோம். சாது நாதத்தை முழங்குவோம்.
சமய, கலாசார, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் உருவானமை.
கண்டி உடன்படிக்கையின் 5வது வாசகத்தில், பெளத்த சமயத்தைப் பாதுகாப்பதாக ஆங் கிலேயர் வாக்குறுதி அளித்திருந்தாலும் அம்மதத்தைச் சாராத வெளிநாட்டவர்களால், பௌத்தத்தைப் பின்பற்றும் அரசர் ஒருவரால் வழங்கப்படும் பாதுகாப்புக் கிடைக்கும் எனகண்டி மக்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள கவிதையில் அரசர் ஒருவர் கிடைக்கப் பெற்றால். ஊர்வலம் செல்லவும் சாது நாதத்தை முழங்கவும் தயாராக இருப்பதிலிருந்து, இந்நிலைமை நன்கு விளங்குகின்றது. பௌத்த குருமார் போராட்டத்திற்கு உதவியமையும் இதற்கு இன்னுமொரு உதாரணமாகும்.
வெளிநாட்டவரின் ஆட்சியில் தமது கலாசாரமும் சம்பிரதாயங்களும் அழிந்தொழிந்து போகும் என்ற பயம் மக்கள் மனதில் குடிகொண்டிருந்தது. மன்னர் ஆட்சியில் பழைய சம்பிரதாயங்களைப் பாதுகாத்தல் அரசர் ஒருவருடைய கடமையாகும். அதேபோல அரச மாளிகை, அரச சபை, நிருவாகம் என்பவை தொடர்பான பல சம்பிரதாயங்கள் காணப்பட்டன. பழைய ஆட்சியில் தத்தமது பதவிக்குத் தகுந்த ஆடை ஆபரணங்கள் அணியப்பட்டமை அவற்றின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலாகும்.
என்றாலும் கண்டி நகரில் காணப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் அவ்வாறான சம்பிரதாயங்களைக் கொண்டவர்கள் அல்லர். இதனால் சமய ரீதியிலும் கலாசார ரீதியிலும் ஆங்கிலேயருக்கும் கண்டியர்களுக்கும் இடையில் இடைவெளி ஒன்று உருவாகி இருந்தது. இது கண்டியர்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டுவதற்கான காரணியாக அமைந்தது.
மலைநாட்டுப் பிரதானிகளுக்கு ஏற்பட்ட தாக்கம்.
1815 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கேற்ப கண்டி இராச்சிய பாரம்பரிய பதவிகளை ஆங்கிலேயர் தொடர்ந்தும் பேணி வந்தாலும் பிரதானிகளின் அதிகாரமும் சமூக நிலைமையும் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. பிரித்தானியப் படை வீரர்கள் தமக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை என்று பிரதானிகள் டொயிலியிடம் முறைப்பாடு செய்திருந்தனர். பிரதானிகளின் சம்பிரதாயபூர்வ வருமான வழிகளும் ஆங்கிலேயரால் பாதிப்புற்றிருந்தன. ஆங்கிலேயர் தெருக் கடவைகளுக்கான வரியை அகற்றியமையால், பிரதானிகள் அதன் மூலம் பெற்று வந்த வருமானத்தை இழந்திருந்தமை இதற்கு உதாரணமாகும். பிரதானிகளுக்கு பாரம்பரியமாக உரிமையாக இருந்த பதவி நிலைகளை மாற்றியமைப்பதற்கும் ஆங்கிலேயரால் இயலுமாயிருந்தது. கண்டி இராச்சியத்தின் போக்குவரத்துக் கடமைகளுக்குப் பொறுப்பாக இருந்த மடிகே முகாந்திரம் பதவிக்கு இதுவரை சிங்களவர்களே நியமிக்கப்படும் வழக்கம் இருந்து வந்தது. என்றாலும் ஆங்கிலேயர் அந்நிலைமையைக் கவனத்திற் கொள்ளாது ஹஜ்ஜி மரிக்கார் என்ற முஸ்லிம் ஒருவரை முகாந்திரம் பதவிக்கு நியமித்திருந்தனர். இதனால் ஊவா வெல்லஸ்ஸ பிரதேசப் பிரதானிகளிடையே பெரும் மனச்சஞ்சலம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு முறைகளில் பிரதானிகளின் அந்தஸ்த்திற்கும் சலுகைகளுக்கும் வருமான வழிமுறைகளுக்கும் தாக்கம் ஏற்பட்டமையால் அவர்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்தனர்.
1818 சுதந்திரப் போராட்டத்தின் இயல்பு
ஆங்கிலேயர் ஆட்சிமீது கண்டியர்களுக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சிம்மாசனத்திற்கு உரிமை கோரி துரைசாமி என்றொருவர் வெல்லஸ்ஸப் பிரதேசத்தில் வெளிப்பட்டார். இவர் கொகுகும்புரே ரட்டேரால போன்ற பிராந்தியத் தலைவர்களின் உதவியுடன் அரசுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களை ஒன்று திரட்டுவதாக பதுளையின் அரச அதிபரான டக்லஸ் வில்சன் அறிந்து கொண்டார். உடனே துரைசாமியைக் கைதுசெய்வதற்கு டக்லஸ் வில்சன், முகாந்திரம் ஹஜ்ஜி மரிக்கார் உட்பட ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார். அங்கு சென்ற வேளையில் அவர்கள் போராளிகளால் கொலை செய்யப்பட்டனர். பின்னர் டக்லஸ் வில்சன் அங்கு சென்ற வேளையில் அவரும் போராளிகளின் தாக்குதல்களால் உயிரிழந்தார். வெல்லஸ்ஸப் பிரதேச மக்கள் துரைசாமியைச் சூழ ஒன்றுபடுவதைக் கண்ட அரசாங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஊவாவுக்குப் பொறுப்பான கெப்பட்டிப் பொல திஸாவையை அனுப்பி வைத்தது என்றாலும் அவர் தம்முடன் வந்த ஆங்கிலப் படையைத் திருப்பியனுப்பி விட்டு, போராளிகளுடன் சேர்ந்து கொண்டார். இவ்வாறு அவர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வந்ததுடன் கண்டிப் பிரதானிகள் பலரும் போராட்டத்தில் பங்கெடுக்க முன்வந்தனர். கண்டிப் பிரதேசம் எங்கும் போராட்டம் பரவுவதற்கும் அது காரணமாயிருந்தது. முக்கியமான பிரதானிகளுள் மொல்லிகொடையும் எக்னெலி கொடையும் மாத்திரம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கெப்பட்டிப்பொலவின் வழிநடத்தலில், போராளிகளால் துரைசாமி கண்டியின் மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். அதன்படி மன்னரின் மகாதிகாரமாக பிரதானியான கெப்பட்டிப்பொல நியமனம் செய்யப்பட்டார். இந்நாட்டு அரசுரிமையின் குறியீடாகக் கொள்ளப்பட்ட புனித தந்தம் போராளிகளின் கைவசமானமை ஆங்கிலேயர் எதிர் நோக்கிய இன்னுமொரு முக்கிய பிரச்சினையாகும். எஹலபொல போராட்டத்தில் கலந்து கொள்ளாதுவிடினும் போராட்டத்தை முன்னெடுக்கும் பிரதானிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக ஆங்கிலேய அதிகாரிகள் சந்தேகமுறத் தொடங்கினர். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
போராட்டத்தை அடக்குவதற்கு கடுமையான நட 1818 ஆங்கிலேயர் மிகக் வடிக்கைகளை மேற்கொண்டனர். பெப்பிரவரி மாதத்தில் ஆளுநர் கண்டிப் பிரதேசத்திற்கு இராணுவச் சட்டத்தைப் பிரகடனஞ் செய்தார். கரையோரத்தில் இருந்த ஆங்கிலேயப் படையைக் கண்டிக்கு அனுப்பிவைத்தார். போராட்டத்தை அடக்குவதற்கு ஆங்கிலேயர் நிலத்தைப் பாழடையச் செய்யும் கொள்கையைக் கையாண்டனர். கிராமங்களுக்குத் தீயிடல், மக்களின் சொத்துக்களை அழித்தல், மக்களை கைது செய்து இராணுவச் சட்டப்படி தண்டனை வழங்கல் என்பன அக்காலத்தில் சர்வசாதா ரணமாகக் காணப்பட்டன. ஆங்கிலேயரின் கடும் அடக்கு முறையால் நீண்ட காலப் போராட்டம் ஒன்றிற்கு முகங்கொடுக்க போராளிகளால் இயலவில்லை. இதனால் போராட்டத் தலைவர்கள் பலரையும் கைது செய்வதற்கு ஆங்கிலேயரால் முடியுமா யிருந்தது. கொப்பேகடுவ கலகெதர மொகட்டால, கதிர்காம பசநாயக்க நிலமே, பூட்டாவே ரட்டேரால, எஹல் பொல அதிகாரம் போன்ற தலைவர்கள் அவ்வாறு கைதானவர்களில் சிலராவர்.
போராட்டத்தில் அரசனாக குறிப்பிடப்பட்டவர் உண்மையான துரைசாமி அல்ல என்றும் அவருக்கு அரசுரிமை இல்லையெனவும் அவர் போலியான நபர் எனவும் ஆங்கிலேயர் பிரசாரம் செய்தனர். அத்துடன் போராட்டத்தின் தலைவர்களான கெப்பட்டிக் பொல, மடுகல்ல, பிலிமத்தலாவை ஆகியோருக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. 1818 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் போராட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் கெப்பட்டிப் பொலவும் மடுகல்லேயும் கைது செய்யப்பட்டனர். இராணுவ நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு தலைவர் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1818 நவம்பர் 26 ஆம் திகதி ஆங்கிலேயரால் கெப்பட்டிப் பொலவும் மடுகல்லவும் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
1818 சுதந்திரப் போராட்டத்தின் தோல்வி
போராட்டம் ஆரம்பித்து சில மாதங்களில் அது மிக வேகமாகப் பரவிச் சென்றது. ஒரு பிரதேசத்தில் வீடுகளையும் தோட்டந் துரவுகளையும் நாசமாக்கி, ஆங்கிலப் படையால் போராளிகள் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரதேசத்தில் போராட்டங்கள் மூண்டன. அப்போது ஆங்கிலேயர் மேலதிக இராணுவத்தை வரவழைத்து, மிகக் கடுமையான அடக்கு முறையைக் கையாண்டதுடன், ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு போராளிகளால் முடியாமல் போனது. மொல்லிகொட நிலமே ஆங்கிலேயருக்குச் சார்பாக நடந்து கொண்டபடியால் அவரது நிருவாகப் பிரதேசமான நான்கு கோரளை ஊடாக கொழும்புடன் தொடர்புகளை மேற்கொள்ள முடிந்தமையும் ஆங்கிலேயருக்குச் சார்பாக விளங்கியது. இவ்வாறு நோக்கும்போது போராட்டம் தோல்வியுற்றமைக்கான காரணங்கள் பலவற்றைக் கண்டறியலாம். அவ்வாறான காரணிகள் சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளன,
ஆங்கிலேயர் கையாண்ட கடுமையான அடக்குமுறைக் கொள்கை.
நீண்டகாலப் போராட்டத்திற்குத் தேவைப்பட்ட ஆயுதங்களோ வளங்களோ கண்டியரிடம் காணப்படாமை.
போராட்டம் முறையாக மேற்கொள்ளப்படாமை.
அரசனாகத் தோன்றிய நபர், அரசுரிமையற்ற போலியானவன் என்று தெரிய வந்தமை.
1818 சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகள்
1818 ஆம் ஆண்டு போராட்டத்தின் விளைவாக எஹலபொல, கெப்பட்டிபொல, மடுகல்ல போன்ற தலைவர்கள் மலைநாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டது. இன்னும் பல பிரதானிகளின் சொத்துக்கள் அரசுடைமை யாக்கப்பட்டன. போராட்டத்தை ஆதரித்த தலைவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர். அரசிற்கு எதிராகச் செயற்பட்ட தலைவர்களுக்கு இவ்வாறு பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டதுடன் ஆதரவாகச் செயற்பட்ட மொல்லிகொட, எக்னெலிகொட போன்ற பிரதானிகளுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆங்கிலேய அரசு வழங்கியது.
1818 ஆம் ஆண்டு போராட்டம் தோல்வியுற்றமையால் ஆங்கிலேயருக்கு தமது அதிகாரத்தை மேலும் நன்கு உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாயிருந்தது. ஆளுநர் பிரௌவுன்றிக் 1818 நவம்பர் 21 ஆந் திகதி பிரகடனம் ஒன்றை வெளியிட்டதன் மூலம், கண்டியில் தமது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்தார். 56 அம்சங்களைக் கொண்ட இந்த கண்டிப் பிரகடனத்தில் பிரதானிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதுவரை பிரதானிகளிடம் காணப்பட்ட நீதி அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டு, ஆங்கிலேய நீதிமன்ற முறைமையை கண்டியிலும் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற் கமைய 1818 நவம்பர் கண்டிப் பிரகடனம் மூலம் கண்டியின் மீதான ஆங்கிலேயரின் ஆட்சி அதிகாரம் முழுமையானதாக்கப்பட்டது.
பின் 1818-1832 வரை இலங்கையில் இராணுவ ஆட்சி இடம்பெற்றது.
நன்றி
0 Comments