மனித
உரிமைக் காப்பகம்
1978 ஆம் ஆண்டு ஹெல்சிங் என்ற இடத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கா, ஆபிரிக்கா, மத்திய கிழக்குப் பகுதி ஆகிய இடங்களிலும் 5 பிரிவுகள் செயற்பட்டு வருகின்றது.
இது ஒரு அரசுசாராத் தனி நிறுவனமாக இருந்தபோதிலும் பொதுமக்களின் நிதி உதவியையும் பெற்றுச் செயற்படுகின்றது. மேலும் 80 மேற்பட்ட ஜனநாயக முற்போக்கு கொள்கைகள் கொண்ட நாடுகளிலும் மனித உரிமைகள் மீறப்படுவதை இந்த நிறுவனம் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள், அப்பாவி மக்கள் மீது நடத்தும் அராஜகச் செயல்கள், முறையற்ற வகையில் கைதிகளை கொடுமைப்படுத்துவது. வன்முறை புரிந்து இனக்கலவரங்கள் மூலம் மனித உரிமைகளை மீறுவது போன்றவற்றை இந்நிறுவனம் கண்டிக்கின்றது.
இந்நிறுவனம் மனித உரிமை மீறும் நாடுகளை நகரங்களைப் பெயர் சொல்லி பகீரங்கப்படுத்துவது அந்நாடுகளுக்கிடையே கொள்கை மாற்றங்களை உருவாக்குவதும் இதன் பணியாகும்.
மரண தண்டனையை தடை செய்தல், சிறுவர்களை போருக்குப் பயன்படுத்தல், நீதி பரிபாலனத்தின் துஷ்பிரயோகம் போன்றவற்றை கண்டிக்கிறது. குற்றவாளிக்கும் வாழ உரிமையுண்டு என வலியுறுத்துகின்றது.
சமய உரிமைக்காக கருத்துக்களைப் பரிமாறவும் மக்களுக்கு உரிமையுண்டு. கருக்கலைப்பு சட்டரீதியாக்க வேண்டும்.
1998 இல் சர்வதேச மாநாடு எந்த ஒரு யுத்தத்தில் பிள்ளைகளை போர் வீரராக மாற்ற இயலாது. மனிதர்களை கொலை செய்கிற மிதிவெடிகளை தடைசெய்யப்பட்டவையாக மாற்ற முன்னின்று முடிவெடித்தன.
ஆயுதங்களை கடத்தலுக்கு எதிராக பெண்கள் உரிமைக்காக எயிட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டவரின் உரிமைக்காக, பொதுமக்களுக்காக, சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு எதிராக இனஅழிப்புக்கு எதிராக, இந்நிறுவனம் செயற்படுகின்றது.
ஆரம்பத்தில் ஹெல்சிங்கியுல் கண்காணிப்பு
நாடுகளை அச்சுறுத்தவும் ஆயுத முனையில் பிறநாட்டை அடக்கவும் கூடாது.
நாடுகளின் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது.
நாடுகளுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டால் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்தல்.
ஒரு நாட்டின் பேச்சுவார்த்தையில் பிறநாடுகள் தலையிடக் கூடாது.
பிரச்சினைக்கு சமாதான முறையில் தீர்வு காணல்,
அடிப்படை உரிமைகளை மதித்தல் : சமய ரீதியில், சிந்தனை ரீதியில்
எல்லா மனிதருக்கும் சமஉரிமை உண்டு. மனித சமுதாயம் தங்கள் பிற்காலத்தை தாங்கள் தாங்கள் முடிவெடுக்க உரிமையுண்டு.
நாடுகளும் நாடுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தல்.
அகில ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனைவரும் பொறுப்புடையவராக வேண்டும்.
இவ் அமைப்பில் 150க்கு மேற்பட்ட திறன்கள் கடமையாற்றுகின்றனர். நம்பிக்கை வாய்ந்த அறிக்கைகள் தயாரிப்பதே இவ் அமைப்பின் முக்கிய பணியாகும். இவ் அமைப்பின் அறிக்கைகளுக்கு சர்வதேச மதிப்புண்டு.
நன்றி
0 Comments