அகில உலக
மன்னிப்புச் சபை
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டவாறு அதுபோன்ற பிற சாசனங்களில் வெளிப்படுத்தப்பட்டதைப் போன்று மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பே அகில உலக மன்னிப்புச் சபை ஆகும். இவ் அமைப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச மன்னிப்புச்சபை உலக ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும் உலகில் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித உரிமைகள் மதிக்கப்படாத இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கும்.
மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு மக்களுடாக இக்கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்கப்படும். இந்த நிறுவனம் பொதுவாக கைதிகளின் பிரச்சினைகள் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதற்குரிய வழிகளைப் பற்றியும் தேவையற்று முறையின்றி விசாரணை செய்யாமல் சிறையிலடைக்கும் கைதிகளை விடுவிக்கச் செய்யும் அமைப்பாகத் தொழிற்படுகின்றது.
இந்நிறுவனம் அளிக்கும் ஆலோசனைகளை பொதுச்சபை ஏற்று உரிய நடவடிக்கை மூலம் மனித உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுகின்றது. கைதிகள் சிறையில் இருக்கும்போது இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்கின்றது. சிறையிலிருக்கும் பொழுதோ, கைது செய்யப்பட்டவுடனேயோ காணாமல் போனாலும் இறந்தாலும் உரிய விளக்கம் கேட்கும் உரிமை பெற்றுள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளைச் சித்திரவதை செய்வதை தடைசெய்கிறது. பெண் கைதிகளைக் கொடுமைப்படுத்துவதையும், இரவு நேரங்களில் காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து விசாரணை செய்வதையும் கண்டிக்கின்றது. சில குறிப்பிட்ட காலத்தில் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்தல், அவர்களை திருத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இந்நிறுவனம் செய்து வருகின்றது. உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதை பெற்றுக் கொடுப்பதற்காக வாதாடுகிறது. 1977 ஆம் ஆண்டு நோபல்பரிசு பெற்றது. 1978 இல் ஐ.நா. பரிசும் பெற்றுக் கொண்டது.
பத்திரிகைகளில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தல் மனித உரிமை மீறலுக்கு நேரடியாக மக்கள் கருத்தைப் பெற்று வாதாடல், ஆய்வு செய்தல் போன்ற பல பணிகளை மேற்கொள்கின்றது. இருளை சபித்தலை விட சிறு மெழுகுவர்த்தியைக் கொழுத்துதல் மேலானது என்பது இதன் விருது வாக்காகும்.
நன்றி
0 Comments