தத்துவார்த்த அணுகுமுறை
அரசறிவியல் ஆய்வில் முதலில் பயன்படுத்தப்பட்டதும், நீண்டகால நிலைப்பினை கொண்டதுமான அணுகுமுறை தத்துவார்த்த அணுகுமுறை ஆகும். இதனை மெய்யியல் அணுகுமுறை என்றும் நியமம்சார் அணுகுமுறை என்றும் இலட்சியவாத அணுகுமுறை என்றும் அழைப்பர்.
இவ்வணுகு முறையானது அரசியலின் உண்மை நிலையை அன்றி கற்பனையில் உதிக்கும் அரசியல் நிலையினை கற்பதற்கான ஆய்வு முறையாக காணப்படுதல். இவ்வணுகு முறையில் பிளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டில் ஆகியோர் முன்னோடிகளாக காணப்படுகின்றனர். பிளேட்டோ தன்னுடைய குடியரசு எனும் நூலிலும் தோமஸ் மோர் தன்னுடைய கற்பனை உலகு எனும் நூலிலும் தத்துவ வார்த்தை அரசு பற்றிய கற்பனையை செய்துள்ளனர்.
மேலும் ஐரோப்பிய அரசியல் சிந்தனையின் பிரதான சக்திகளாக இருந்த சிசுரோ, மாக்கியவல்லி, தோமஸ் கோப்ஸ், ஜோன் லொக், கால்மார்க்ஸ் போன்றவர்கள் இம்முறையினை பயன்படுத்தி உள்ளனர்.
20 ஆம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் மகாத்மா காந்தி, ஜோன் நோல்ஸ், சால்ஸ் டைலர் போன்றவர்களும் இவ்வழுகுமுறை தொடர்பில் முக்கியம் பெறுகின்றனர்.
இச் சிந்தனையாளர்களின் தத்துவங்களில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டிருந்த போதிலும் இவர்களிடையே பொதுவான 02 அம்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது.
இவர்கள் அரச அறிவியலாளர்கள் அன்றி அரசியல் தத்துவவியலாளர்களாக காணப்பட்டமை.
இவர்கள் அனைவரும் அரசியலை இலட்சிய கோணத்தில் பார்த்தமை.
தத்துவார்த்த அணுகுமுறையின் பண்புகள்
உலகைப் பற்றிய அடிப்படை வினாக்களை எழுப்பி பரிசீலனை செய்தல். இங்கு உலகம் என்பது யாது?, உலகம் எவ்வாறு நிலைப்புக் கொள்கிறது?, மனித வாழ்க்கை என்பது யாது?, மனித வாழ்க்கை மற்றும் இருப்பிற்கு அர்த்தம் உண்டா?, போன்ற வினாக்களை எழுப்பி உலகைப் பற்றிய பரிசீலனை மேற்கொள்வது போல அரசியலைப் பற்றியும் வினாக்களை எழுப்பி அரசியலை பரிசீலனை செய்கின்றனர். அதன்படி அரசியல் என்பது யாது?, அரசு என்பது யாது?, அரசின் நோக்கம் என்ன?, அரசுக்கு மனிதன் ஏன் அடிபணிய வேண்டும்?, அரசுக்கும் ஏனைய சமூக நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு யாது? ஆகிய வினாக்களை எழுப்பி அன்றும், இன்றும் அரசியல் பற்றி ஆராய்கின்றனர்.
தத்துவஞானிகள் உலகையும் அரசியலையும் விளங்கிக் கொள்வதற்கான எண்ணங்களின் பொருளை உறுதிப்படுத்தினர். உதாரணம்,
நியாயம்
சுதந்திரம்
சமத்துவம்
உரிமைகள்
தத்துவம் சார்ந்த கருத்துக்களுக்கு ஈடுபாடு காட்டுதல்.
அரசியலின் உண்மை நிலையை ஆராய்தல்.
தத்துவ கருத்துக்களின் அடிப்படையில் அரசியல் நிறுவனங்களின் தொழிற்பாட்டை மதிப்பீடு செய்தல்.
முன் வகுக்கப்பட்ட கோட்பாடுகளிலும், கருதுகோள்களிலும் தங்கி இருத்தல்.
தத்துவார்த்த அணுகுமுறையின் நன்மைகள்
அகநிலை நோக்கின் அடிப்படையில் அரசியலை ஆராய கூடியதாக இருத்தல்.
ஒரு விடயத்தை பிரமாணம் சார் தீர்ப்பின் அடிப்படையில் நோக்க முடிதல்.
ஒரு நிச்சயமான தளத்திலிருந்து கொண்டு அரசியலை அறியக் கூடியதாக இருத்தல்.
நன்மையிலிருந்து தீமையை வேறுபடுத்தி காட்ட உதவுதல்.
தத்துவ கருத்துக்கள் அரசியலை கற்பதற்கு ஏற்றதாக அமையும் அமையும் என்பதை உறுதிப்படுத்துதல்.
அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளின் மூலமும் அரசியல் பற்றி கற்கக்கூடியதாக இருத்தல்.
நன்றி
0 Comments