பிரித்தானியர் ஆட்சியின் கீழ்
இலங்கையின் கலாச்சார மாற்றங்கள்
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் சமனாக கலாசார மாற்றங்களும் ஏற்பட்டன. மேலைத்தேய கலாசாரம் நாடு முழுவதும் பரவியதை அக்காலப் பகுதியில் அவதானிக்க முடிந்தது. கோல்புறூக் சீர்த்திருத் தங்களின் பின்னர் ஆங்கில மொழி மூலமான மேலைத்தேயக் கல்வி முறை நாட்டில் வேகமாகப் பரவியது. பெரும்பாலும் மிஷனரிப் பாடசாலைகளிலும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளிலும் செயற்படுத்தப்பட்ட பாடத்திட்ட உருவாக்கம், கற்பித்தல் நடவடிக்கைகள் என்பன வெளிநாட்டவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. எனவே அப்பாடசாலைகளின் மூலம் மேலைத் தேசக் கலாசாரம் பரவுவதற்கான வழியேற் பட்டது. உயர் கல்விக்காக வெளிநாடு சென்று வந்தவர்களாலும் மேலைத்தேய கலா சாரத்தின் சில அம்சங்கள் இலங்கையில் பரவின.
19 ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டத் துறையின் பரம்பல், வர்த்தக வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி என்பன காரணமாக ஐரோப்பியர் அதிகளவில் இலங்கைக்கு வருகை தந்தனர். எனவே அவர்களின் விடுமுறைக் கால விடுதிகள் மற்றும் இரவுக் களியாட்ட விடுதிகள் என்பன இங்கு உருவாகின. இதன் காரணமாகவும் மேலைத்தேய கலாசாரம் இலங்கையில் பரவுவதற்கு வழிபிறந்தது. இவ்வாறான பல்வேறு காரணங்களால் மேலைத்தேய ஆடையணிகள், பழக்க வழக்கங்கள், வாழ்த்து வணக்கம் தெரிவிக்கும் முறைகள், கட்டட கலையம் சங்கள், உணவு, பான வகைகள் என்பன இலங்கைக் கலாசாரத்துடன் கலந்துக் கொண்டன.
நன்றி
0 Comments