திலோத்தமை - THILOTHTHAMAI


திலோத்தமை


திலோத்தமை - THILOTHTHAMAI

திலோத்தமை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். திலம் என்றால் எள். எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்பெயர் வந்தது. இவரை சுந்தன் - உபசுந்தன் என்ற அசுர சகோதரர்களை அழிப்பதற்காக, பிரம்மாவின் ஆணைப்படி, விஸ்வகர்மா படைத்தார்.

இரணியகசிபு வம்சத்தில் பிறந்தவர் நிகும்பன் என்ற அரக்க மன்னனுக்கு சுந்தன் - உபசுந்தன் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் பாசமானவர்களாக இருந்தார்கள். அச்சமயத்தில் இருவரும் பிரம்மாவை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மாவிடம் தாங்கள் பெரும் பலசாலிகளாகத் திகழவேண்டும், விரும்பிய வடிவத்தை எடுக்கும் ஆற்றல் தங்களுக்கு வேண்டும், எல்லாக் கலைகளும் தங்களுக்குக் கைவர வேண்டும் போன்ற வரங்களைக் கேட்டார்கள். பிரம்மாவும் அவை அனைத்தையும் தந்தார்.

அத்துடன் அவர்கள் சாகா வரத்தினையும் வேண்டினார்கள். அது இயலாது என்று பிரம்மா மறுத்ததால், பேரன்பு கொண்ட இருவரும், தங்களில் கைகளால் மட்டுமே மரணம் நிகழ வேண்டுமென வரம் வாங்கிக்கொண்டார்கள். அதன் பிறகு தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் வதைத்தார்கள்.

பிரம்மாவிடம் தேவர்கள் அனைவரும் தங்களை காக்கும் படி வேண்டினார்கள். தேவர்களில் தேவ சிற்பியான விஸ்வகர்மாவின் துணையோடு ரத்தினக் குவியல்களால் திலோத்தமை உருவாக்கப்பட்டாள். அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால் பிரம்மன் அவளுக்கு திலோத்தமை என்ற பெயரைக் கொடுத்தார். உலகில் உள்ள பெண்களிடம் இருக்கும் மொத்த அழகும் அவளிடம் இருந்தமையால் பிரம்மதேவனும் அவளுடைய அழகில் மயங்கினார்.

சுந்த, உபசுந்தர்கள் முன்னிலையில் திலோத்தமையை நடனமாடச் செய்தார்கள் தேவர்கள். அவள் அழகில் மயங்கிய இரு அசுரர்கள், தனக்கு மட்டுமே திலோத்துமை கிடைக்க வேண்டும் என்று எண்ணி போர் புரிந்தார்கள். அதனால் இருவரும் மாண்டார்கள். 

நன்றி

Post a Comment

0 Comments