மகாபாரதம் பகுதி - 10
பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள்.அவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே! பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள். பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன்.
இந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம்
செய்த விசித்திரவீரியன் அவர்களைக்
கூடாத நாளே இல்லை
என்றாலும், இரண்டு
பெண்களுக்கும் கருத்தரிக்கவே இல்லை. அது
மட்டுமல்ல! பெண்
இன்பத்தை அதிகமாக
அனுபவிப்பவர்கள் பெறும்
க்ஷயரோக நோயால்
அவன் இறந்தே போனான்.
தாய் யோஜனகந்தி துக்கத்தில்
ஆழ்ந்தாள். சந்திரவம்சம்
இத்தோடு தொலைந்து
விட்டதே, என்ன
செய்யலாம்? என்ற
ஏக்கத்தில் பீஷ்மரை
அழைத்தாள். பீஷ்மா!
நான் சொல்வதைக் கேள்.
நீ உன் தந்தைக்குகொடுத்த வாக்குறுதியை நாட்டின்
நலன் கருதி கைவிட
வேண்டிய நிலைமை
இப்போது வந்து
விட்டது. மேலும்,
தாயின் அனுமதியுடன் தந்தைக்கு
செய்து கொடுத்த சத்தியத்தை
மீறுவதில் தவறேதும்
இல்லை.தேவமுறை என்ற
தர்மத்தின்படி, சகோதரன்
குழந்தையின்றி இறந்து
போனால், நாட்டை ஆளும்
பொருட்டு, அவனது
இன்னொரு சகோதரன்
அப்பெண்ணைக் கூடி
குழந்தை பெறலாம்.
அதன்படி நீ
அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப்
பெறு. நாட்டைக் காப்பாற்று.
இது என் உத்தரவு,
என்றாள். இடியோசை
கேட்ட நாகம் போல்
நடுங்கி விட்டார்
பீஷ்மர்.அம்மா!
இது கொடுமை அல்லவா?
தம்பியின் மனைவிகளை
நான் தொடுவதாவது? மேலும்,
எந்த நிலையிலும் என்
பிரம்மச்சரிய விரதத்தை
கைவிடுவதில்லை என்ற
சத்தியத்தை உங்கள்
தந்தைக்கு செய்து
கொடுத்தேன். என்
தந்தையிடமும் வாக்கு
கொடுத்தேன். வேண்டாம்
தாயே. ஆனால், இன்னொரு
யோசனை இருக்கிறது. அதை
பரிசீலியுங்கள் தாயே!
என்றார்.
யோஜனகந்தி அவசர
அவசரமாக, சொல்!
பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா? சந்திரவம்சம் அழியாமல்
இருக்க மார்க்கம் இருக்கிறதா?
நாட்டை ஆள ஒரு
புத்திரன் பிறக்கப்
போகிறானா? சொல் சொல் ஏக்கமும் ஆவலும்
என்னை பதட்டமடையச் செய்கின்றன,
என்றாள்.தாயே!
பரசுராமர் அரசகுலத்தின்
மீது கோபம் கொண்டு,
எல்லா அரசர்களையும் வேருடன்
கிள்ளி எறிந்து விட்ட
காலம் ஒன்று இருந்ததைத்
தாங்கள் அறிவீர்கள்.
அப்போது கணவனை
இழந்த அரசிகள் எல்லோரும்
ஒன்றுகூடி, முனிவர்கள்
மூலமாக குழந்தைகளைப் பெற்றுக்
கொண்டார்கள். இது
சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த
விதியின் படி
அம்பிகா, அம்பாலிகாவைக் குழந்தை பெறச்
செய்யலாம், என்றதும்,
யோஜனகந்தி ஆழ்ந்த
சிந்தனையில் இறங்கினாள்.பல ஆண்டுகளுக்கு முன்
தன் வாழ்வில் நடந்த
அந்த நிகழ்ச்சியை நினைவு
கூர்ந்தாள்.அப்போது
யோஜனகந்தி மிக
மிக அழகாக இருப்பாள்.
அவளது தொழில் படகோட்டுவது
தானே! ஒருநாள் பராசரர்
என்ற முனிவர் யமுனைக்கரைக்கு வந்தார். அந்த
நேரத்தில் உலகம்
அதுவரை கண்டிராத ஒரு
அதிர்ஷ்டகரமான கிரகநிலை
ஏற்பட்டது.
பராசரர் இதை
தன் ஞான திருஷ்டியால்
அறிந்தார். இன்னும்
சிறிது நேரத்தில் அந்த
கிரகநிலை மாறி
விடும். அதற்குள் இந்த
பூமியில் ஒரு
குழந்தை பிறந்தால்,
அது உலகம் புகழும்படி
வாழும். உலகத்துக்கு அரிய
பல கருத்துக்களைத் தரும்
என்று அவர் மனதில்
பட்டது.யோஜனகந்தியின் படகில்
ஏறினார். ஆற்றின்
நடுவே சென்ற போது,
பெண்ணே! உலகம் இதுவரை
கண்டிராத ஒரு
அதிசய கிரகநிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நேரத்தில் ஒரு
குழந்தை பிறந்தால்
அதனால் இந்த உலகமே
பலனடையும். இங்கே
நீயும், நானும் மட்டுமே
இருக்கிறோம். நான்
உன்னோடு கூடுகிறேன்.
நீ அந்தக் குழந்தையைப்
பெறும் பாக்கியவதி ஆகிவிடு.
குழந்தை பிறந்ததும்
நீ மீண்டும் கன்னித்தன்மை
உடையவளாகி விடுவாய்.
இது சத்தியம், என்றார்.யோஜனகந்தி கோபப்பட்டாள்.முனிவரே! உம்
தரத்துக்கும் தகுதிக்கும்
இந்த வார்த்தைகள் அழகா!
கல்வியறிவற்றவள் என
நினைத்து தானே
என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்!
நீர் சொல்வதை நம்ப
முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர்
பதட்டப்பட்டார். தனது
நிலையில் உறுதியாக
நின்றார்.கரைப்பார்
கரைத்தார் கல்லும்
கரையுமல்லவா? யோஜனகந்தியும் கரைந்து விட்டாள்.
தன் உடலில் இருக்கும்
மீன்வாடை அவரை
நெருங்க விடாது
என அவரிடம் கூறினாள்.
அந்த மணத்தை அப்படியே
மாற்றிய பராசரர்
அவளது உடலுக்கு சந்தன
மணத்தைக் கொடுத்தார்.
யோஜனா மகிழ்ந்து போனாள்.
அதேநேரம், பகிரங்கமாக
நட்ட நடு ஆற்றில்
உறவு கொள்வது எப்படி
என வெட்கப்பட்டாள்.அப்போது
பராசரர் தன்
சக்தியால் அந்த
இடத்தில் இருள்
கவியச் செய்தார். அந்த
நிலையில் அவர்கள்
கூடினர். அவள்
கர்ப்பமானாள்.
தொடரும் .....
0 Comments