AI மற்றும் எதிர்கால
வேலை வாய்ப்பு
இன்றைய உலகில் மிக அதிகம் பேசப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முக்கியமான ஒன்று Artificial Intelligence (AI) ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இது விஞ்ஞானிகளின் ஆய்வு கூடங்களில் மட்டும் இருந்தாலும், இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறியுள்ளது. நம் கைப்பேசியில் பயன்படுத்தும் voice assistant முதல், சமூக வலைத்தளங்களில் வரும் பரிந்துரைகள் வரை எல்லாம் AI-யின் தாக்கமே. இத்தகைய மாற்றங்கள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது.
AI வளர்ச்சி நமக்கு பல நன்மைகளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் தானாகவே வேலை செய்வதால் உற்பத்தி வேகம் அதிகரிக்கிறது. மருத்துவத் துறையில் நோய்களை வேகமாக கண்டறிய AI உதவுகிறது. கல்வித் துறையில் மாணவர்களின் கற்றல் முறைக்கு ஏற்ப தனிப்பயன் வழிகாட்டல் வழங்கப்படுகிறது. இத்தகைய முன்னேற்றங்கள் மனித வாழ்க்கையை எளிமையாக்கினாலும், வேலை வாய்ப்புகளில் சில சவால்களையும் உருவாக்குகின்றன.
பல வேலைகள் முன்பு மனிதர்களால் செய்யப்பட்டவை. ஆனால் இப்போது அவற்றை automation அல்லது robots செய்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, வங்கிகளில் காசாளர் வேலைகளை பெருமளவில் ATM மற்றும் online banking மாற்றியுள்ளன. அதேபோல், கையால் பொருள் பரிசோதனை செய்த வேலைகளை இன்று computer vision அடிப்படையிலான AI சிஸ்டம்கள் வேகமாகவும் துல்லியமாகவும் செய்கின்றன. இதன் விளைவாக சில துறைகளில் வேலை வாய்ப்பு குறைவது உண்மை.
ஆனால், இதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. AI-யை உருவாக்க, பராமரிக்க, மேம்படுத்த பல நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். Data Scientist, AI Engineer, Machine Learning Specialist, Robotics Technician போன்ற வேலைகள் மிகுந்த தேவை பெறுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு இவ்வகை தொழில் பெயர்கள் கூட பொதுமக்களுக்கு தெரியாதவையாக இருந்தன. ஆனால் இன்று உலகளவில் அதிக சம்பளம் பெறும் வேலைகளில் இவை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன.
வேலை சந்தையின் இம்மாற்றம் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை கூறுகிறது: AI மனிதனை முற்றிலும் மாற்றப்போவதில்லை, ஆனால் AI-யை பயன்படுத்தத் தெரிந்தவர்களே அதிக வாய்ப்புகளைப் பெறப்போகிறார்கள். உதாரணமாக, மருத்துவர்கள் AI உதவியுடன் நோய்களை துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆசிரியர்கள் AI அடிப்படையிலான கல்வி கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை அளிக்கிறார்கள். அதேபோல், விவசாயிகள் கூட AI ஆதரித்த smart farming முறைகளைப் பயன்படுத்தி பயிர்களின் வளர்ச்சியை கண்காணிக்கிறார்கள். இதனால் வேலை அழிந்து போவது இல்லை, மாறாக வேலையின் தன்மை மட்டுமே மாறுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் மீள் திறனாய்வு (Reskilling) மற்றும் மேம்படுத்தல் (Upskilling). எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு நிலைத்து இருக்க வேண்டுமெனில் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மென்பொருள் பொறியாளர் AI-யின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளாவிட்டால், அவரது திறமைகள் பழையதாகிவிடும். அதேபோல், மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர் AI powered digital marketing tools கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்கிவிடுவார். ஆகவே எதிர்கால வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற வேண்டுமெனில், அனைவரும் தங்கள் துறையுடன் தொடர்புடைய புதிய தொழில்நுட்பங்களைப் படிக்க வேண்டும்.
மேலும், AI காரணமாக உருவாகும் வேலைகள் சும்மா தொழில்நுட்ப துறையிலேயே மட்டுமில்லை. Ethics Consultant போன்ற புதிய பணி வாய்ப்புகளும் வருகிறது. AI-யின் நெறிமுறைகள் சரியாக உள்ளனவா? தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க, நிபுணர்கள் தேவைப்படுகிறது. சட்டம், சமூக ஆய்வு, உளவியல் போன்ற துறைகளிலும் AI தொடர்பான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை பாதுகாப்பது தனிநபர்களின் கையில் மட்டுமில்லை, அரசாங்கங்களின் பொறுப்பாகவும் உள்ளது. கல்வி முறையை AI அடிப்படையில் மாற்றி மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தொழில்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து வேலை வாய்ப்பு உருவாக்கும் வழிகளை ஆராய வேண்டும். AI மனிதனை மாற்றாது, மனிதன் + AI சேர்ந்து வேலை செய்தால் தான் மிகச் சிறந்த விளைவைப் பெற முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மொத்தத்தில் பார்க்கும்போது, AI மற்றும் எதிர்கால வேலை வாய்ப்பு என்பது இரு முனைய வாள் போல. ஒரு பக்கம் சில வேலைகளை குறைக்கலாம், ஆனால் மற்றொரு பக்கம் எண்ணற்ற புதிய வாய்ப்புகளையும் திறக்கிறது. எதிர்காலத்தில் வேலை சந்தையில் நிலைத்து நிற்க வேண்டுமெனில், தொழில்நுட்பத்துடன் இணைந்து கற்றுக்கொள்வதே முக்கியம். AI-யை எதிரியாக அல்ல, துணையாகக் காணும் மனப்பாங்கு கொண்டவர்களே நாளைய உலகில் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.
நன்றி




0 Comments